![]() |
![]() |
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சர்வதேச மகளீர் தின விழாவானது கொடிகாமம் வங்கிக்குட்பட்ட யா/கொடிகாமம் அரசினர் வித்தியாலயத்தில் 08.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திரு. F.C. சத்தியசோதி தலைமையில் ஆரம்பமாகியது . இவ் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மேலதிக மாவட்ட செயலாளர் மதிப்புக்குரிய க.சிவகரன் அவர்களும் விருந்தினர்களாக பாடசாலை அதிபர் திரு.க. கோடீஸ்வரன் மற்றும் சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் திருமதி.ஆ.உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்து மங்கள விளக்கேற்றலினை தொடர்ந்து இறைவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து வரவேற்புரையினை சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திருமதி.ஜெ.வசந்தி அவர்களும் தலைமையுரையினை பிரதேச செயலாளர் திரு.F.C.சத்தியசோதி அவர்களும் விருந்தினர் உரையினை முகாமையாளர் திருமதி.ஆ.உமாதேவி அவர்களும் அதிபர் திரு.க.கோடீஸ்வரன் அவர்களும் பிரதம விருந்தினர் உரையினை மேலதிக மாவட்ட செயலாளர் திரு.க.சிவகரன் அவர்களும் நிகழ்த்தினார்கள். பிரதம விருந்தினர் தனது உரையில் பெண்கள் சுய தொழில்களை மேற்கொள்வதன் மூலம் தமது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த முடியும் என கூறினார். அத்துடன் மகளீரிற்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு கலந்து கொண்டிருக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்தது விளங்க தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தொடர்ந்து மகளீரிற்கான விளையாட்டு நிகழ்வுகள் மைதானத்தில் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து வெற்றியாளர்களிற்கான பரிசில் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து கொடிகாமம் வங்கிக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் ( புத்தகப்பை) வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.
![]() |
|
HWPL நிறுவனத்தின் 2026 Peace Educator Training for peace settlement in Srilanka அறிமுக நிகழ்வானது 09.03.2026 திங்கட்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் F.C.சத்தியசோதி அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. குறித்த சான்றிதழ் பயிற்சி நெறிக்கான அறிமுக நிகழ்வில் எமது பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை பீடம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் HWPL நிறுவனத்தின் Northern Sri Lanka General Director Guyomar Rayen , செயலாளர் Jenith Ramdas மற்றும் HWPL Nothern Srilanka நிறுவன ஊழியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
![]() |
|
|
"முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் விஷ போதைப் பொருளை தடுப்பதற்கான வாரத்தை முன்னிட்டு 05/03/2026 தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சாவகச்சேரி நகரம் மற்றும் கோவில் குடியிருப்பு பிரதேசங்களில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தென்மராட்சி பிரதேச செயலாளர் F.C சத்தியசோதி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், குடும்ப நலஉத்தியோகத்தர், பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
![]() |
![]() |





















