மாற்றுத்திறனாளிகளுக்கான யாழ்ப்பாண மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப்போட்டி 09.06.2026 ஆம் திகதி அன்று இடம் பெற்றது. இதில் சாவகச்சேரி சிவபூமி பாடசாலையிலிருந்து கலந்து வெற்றியீட்டிய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு 02.07.2026 இன்று சிவபூமி பாடசாலையில் அதிபர் தலைமையில் இடம் பெற்றது.இதில் தென்மராட்சி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து வீரவீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் என்பன வழங்கி கெளரவித்தனர்.
![]() |
தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி வர்த்தக சங்க வருடாந்த பொதுக்கூட்ட நிர்வாகத் தெரிவானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரின் பங்குபற்றுதலுடன் 08.07.2026 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் தலைமைப்பீட முகாமையாளர், கருத்திட்டமுகாமையாளர், உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 2026 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகதெரிவு இடம்பெற்றது. தலைவராக திரு.இ.கோபிகரன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.
![]() |
![]() |
|
தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது தலைமையக முகாமையாளர் தலைமையில் 23.06.2026 செவ்வாய்க்கிழமை மாலை 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் முகாமைத்துவப்பணிப்பாளர், கருத்திட்டமுகாமையாளர், வங்கிமுகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 2026 ம் ஆண்டிற்கான கெக்குலு சிறுவர் கழக போட்டி , போதை ஒழிப்பு சேமிப்பு வேலைத்திட்டம் மற்றும் குடும்ப வலுப்படுத்தல் வேலைத்திட்ட முன்னேற்றங்கள் தொடர்பாக பிரிவு ரீதியாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
![]() |
![]() |























