தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 2026.06.03 புதன்கிழமை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கௌரவ க .இளங்குமரன் (பா .உ ) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது . இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் திரு. F. C சத்திய சோதி,சாவகச்சேரி நகரசபை தவிசாளர், உபதவிசாளர், சாவகச்சேரி பிரதேசபையின் தவிசாளர் , உபதவிசாளர் மற்றும் நகரசபை மற்றும் பிரதேச சபையின் அழைக்கப்பட்ட கௌரவ உறுப்பினர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள் /பிரதிநிதிகள், சாவகச்சேரி ,கொடிகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் அழைக்கப்பட்ட சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அவர்கள், தென்மராட்சி பிரதேசம் பரந்த நிலப்பரப்பை கொண்ட 60 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி காணப்படுவதால் அதிகமான தேவைகளை கொண்டிருப்பதாகவும் இப்பிரதேச செயலகத்தை இரண்டு பிரதேச செயலகங்களாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்முயற்சிகள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார். இக்கூட்டத்தில் தொழில் முயற்சிக்கான அரசகாணி வழங்கல் ,பிரதேச தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான செயற்றிட் டங்கள்,முன்னுரிமை அடிப்படையில் புனரமைக்கப்பட வேண்டிய பிரதேச சபையின் மற்றும் நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகள், வயல் காணியை வீட்டுத்திட்ட நோக்கத்திற்காக (குடியிருப்பு நோக்கத்திற்காக ) மேட்டுக்காணியாக மாற்றுவதற்கு விண்ணப்பித்த ஒருவருக்கான அனுமதி என்பவற்றிற்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து வெள்ளநீர் தேங்கி நிற்கும் பகுதிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது . மேலும் 28.01.2026 அன்று இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது. அத்துடன் சுன்னாகம் சாவகச்சேரி பஸ் சேவையினை கொடிகாமம் வரை நீடித்தல் நெல்லியடி - கொடிகாமம் பஸ் சேவையினை சாவகச்சேரி வரை நீடித்தல், i - road செயற்றிடங்களில் உள்வாங்கப்பட்ட வீதிப்பகுதியில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் விநியோக மார்க்கங்களை நிறுவுதல் ,கட ற்கரையோர கிராமங்களிற்கான குடிநீர் விநியோக விஸ்தரிப்பு, பிரதேசத்தில் பன்றி நெற்களையினை கட்டுப்படுத்துதல் , சாவகச்சேரி மற்றும் சரசாலை சித்த மத்திய மருந்தகங்களை தொடர்ச்சியாக இயங்கச் செய்தல் ,கச்சாய் கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் கோரிக்கை ,கைதடி நாவற்குழி மீனவர் கடலுக்குச் செல்லும் மற்றும் வலை உலர்த்தும் இடத்திற்கான மண் நிரப்புதல் வரணி குடத்தனை வீதிப் புனரமைப்பு பணிகள் தாமதமடைவதால் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், clean srilanka வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது . DCB நிகழ்ச்சித் திட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களால் 14செயற்றிட்டங்களிற்கு 3.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு அமைச்சால் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், கௌரவ இராமநாதன் அர்ச்சுனா (பா .உ ) அவர்களால் எமது பிரிவுக்குட்பட்ட நான்கு விளையாட்டுகழகங்களின் அபிவிருத்திக்காக தலா 2மில்லியன் ரூபாய் வீதம் 8மில்லியன் ரூபாய் வேலைத்திட்டம் முன் மொழியப்பட்டிருப்பதாகவும் அமைச்சின் அனுமதி கிடைக்குமிடத்து இவையும் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கௌரவ G.G. பொன்னம்பலம் (பா .உ ) அவர்களால் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையை தரம் உயர்த்துதல் ,விசேட மருத்துவப் பிரிவுகளை உருவாக்குதல் அதற்கான மேலதிக ஆளணி கட்டமைப்புகளையும் சுயாதீன நிதிக்கையாள்கைக்கான தனியான கணக்காளர் நியமனம் தொடர்பாகவும் சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையை இரண்டாக்க பிரித்து செயற்படுத்துவது தொடர்பாகவும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தல் தொடர்பாகவும் மருத்துவ சுகாதார ஆளணி வெற்றிடங்களை பூர்த்தி செய்தல் தொடர்பாகவும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை சபையில் சமர்பிக்கப்பட்டதுடன் கொடிகாமம் வைத்தியசாலையின் ஆளணி வெற்றிடத்தை பூர்த்தி செய்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டமானது பி .ப 12.30 மணியளவில் பிரதேச செயலாளரின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.
 WhatsApp Image 2026 06 08 at 10.18.21 AM WhatsApp Image 2026 06 08 at 10.19.32 AM 3  WhatsApp Image 2026 06 08 at 10.19.33 AM 
 
மது பிரிவில் வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ரூபாய் 2 மில்லியன் பெறுமதியான வீடமைத்தலுக்காக கட்டம் III ல் தெரிவு செய்யப்பட்ட 27 குடும்பத்தினருக்கான முதலாம் கட்ட கொடுப்பனவு காசோலை வழங்குதலும் மற்றும் வீடமைத்தல் வழிகாட்டல் அறிவுறுத்தல் வழங்குதலும் 03.06.2026 புதன் கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்டம் III ல் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டதுடன் இவர்களுக்கான முதலாம் கட்ட கொடுப்பனவான 400,000 ரூபாவிற்கான காசோலை தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ க.இளங்குமரன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு இவ்வமைச்சினால் கட்டம் I ல் 29 வீடுகளும் கட்டம் II ல் 34 வீடுகளும் வழங்கப்பட்டு கட்டுமானபணிகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இத்திட்டமானது இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கியுள்ள உடன்படிக்கையின்படி, பின்வரும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை நேரடியாகப் பூர்த்தி செய்கிறது: இலக்கு 1 (வறுமை ஒழிப்பு - No Poverty): விளிம்புநிலை மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சொத்துரிமை மற்றும் உறைவிடத்தை வழங்கி வறுமையிலிருந்து மீட்டல். இலக்கு 6 (தூய நீரும் சுகாதாரமும் - Clean Water and Sanitation): வீடமைப்புடன் இணைந்ததாக நீர் வழங்கல் அமைச்சினால் சுத்தமான குடிநீர் மற்றும் முறையான சுகாதார வசதிகள் உறுதி செய்யப்படுதல். இலக்கு 11 (நிலையான நகரங்களும் சமூகங்களும் - Sustainable Cities and Communities): நலிவடைந்த சமூகங்கள் பாதுகாப்பான, மலிவுவிலையிலான மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளைப் பெறுவதை உறுதி செய்தல். தற்போதைய சவாலான பொருளாதாரச் சூழ்நிலையிலும், கிராமிய உட்கட்டமைப்பு மற்றும் அடிமட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யும் தனது தேசியக் கொள்கையில் அரசாங்கம் உறுதியாக பயணிக்கிறது என்பதை இச்செயற்றிட்டம் வெளிப்படுத்துகிறது. 
 WhatsApp Image 2026 06 04 at 9.56.19 AM WhatsApp Image 2026 06 04 at 9.56.21 AM 
2026ம் ஆண்டின் இரண்டாவது கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் கடந்த 27.05.2026
புதன்கிழமை காலை 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.F.C.சத்தியசோதி அவர்கள் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் திருமதி.வி.பிறேமதாஸ் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர், திரு. எஸ்.ரமேஸ்குமார் மாவட்டச் செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதித்திட்டமிடல்பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்திதலைமைப்பீட முகாமையாளர், பிரதேசசெயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராமஅலுவலர்கள், கிராமமட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் தலைமை உரையாற்றிய பிரதேச செயலாளர் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட உத்தியோகத்தர் அனைவருக்கும் நன்றிகளைக் கூறிக்கொண்டதுடன் உத்தியோகத்தர்கள் அனைவரும் வினைத்திறனுடன் வேலை செய்வதனால் எமக்குக் கிடக்கின்ற கணக்காய்வு விசாரணைகளை குறைத்துக் கொள்ளமுடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இக் கூட்டத்தில் பிரதம உள்ளகக்கணக்காய்வாளரால் மாவட்டச் செயலக கால அட்டவணையின்படி இக் கூட்டத்தினை நடத்தியமைக்காக பிரதேச செயலாளருக்கு நன்றிகளைக் தெரிவித்ததுடன், புதிய பிரதேச செயலாளர் கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் கணக்காய்வு அவதானிப்புக்கள் குறைந்துள்ளதுடன் இவ்வாண்டு முன்னேற்றங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இறுதியாக தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் குறிப்பிடுகையில், குறிப்பிட்ட காலாண்டுக்கான கணக்காய்வு அவதானிப்புக்களுக்கான பதில்கள் இம்முறை திருப்திகரமானதாகவும் இவ்வாண்டு முன்னேற்றங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
 
 
 WhatsApp Image 2026 05 27 at 5.03.44 PM

 WhatsApp Image 2026 05 27 at 5.03.44 PM 1
ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டம்: தென்மராட்சியில் மக்கள் பங்கேற்புடன் பூசைக்குளம் புனரமைப்புப் பணிகள் அங்குரார்ப்பணம்!
​ இலங்கை அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு மற்றும் கிராமியப் பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகளுக்கு அமைவாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) நோக்கிய நகர்வை வலுப்படுத்தும் வகையிலும், யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் பூசைக்குளத்தினை புனரமைக்கும் செயற்றிட்டம் இன்று (03.06.2026) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
​இலங்கையில் பன்முக வறுமையை முற்றாக ஒழித்து, கிராமியப் பொருளாதாரத்தை சுயமாகக் கட்டியெழுப்பும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் மக்களின் வரிப்பணத்திலிருந்து 25,000 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் 'ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்' எனும் தேசிய திட்டம் கடந்த 2026 ஜூன் 02 அன்று நாடளாவிய ரீதியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. ​இதன் ஒரு கட்டமாக, தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவின் J/343 வரணி இயற்றாலை கிராம அலுவலர் பிரிவில், பருத்தித்துறை – கொடிகாமம் பிரதான வீதிக்கு அருகாமையில், சிட்டிவேரம் அம்மன் கோவிலுக்கு வடக்கு பக்கமாக அமைந்துள்ள பூசைக்குளத்தினை புனரமைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு (2026.06.03) புதன்கிழமை காலை 8:00 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ க.இளங்குமரன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. சிட்டிவேரம் ஆலய குருவின் அருளாசியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆரம்ப விழாவில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வரணி இயற்றாலை கிராம அலுவலர் பிரிவின் பிரஜாசக்தி உறுப்பினர்கள், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஏனைய கிராம பிரிவுகளின் பிரஜாசக்தி தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். மக்களின் நேரடிப் பங்கேற்புடன் கூடிய (People's Participation) இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 5 மில்லியன் நிதிஒதுக்கீட்டில் பூசைக்குளத்தினை புனரமைப்பதற்காக அமைச்சினால் கொள்கையளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இக் குளப்புனரமைப்பின் மூலம் கோடை காலத்தில் தங்கு தடை இன்றி கால்நடைகளுக்கான குடிநீர் கிடைப்பனவு உறுதிப்படுத்தப்படுவதுடன் நிலத்தடி நீர் பாதுகாப்பும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 WhatsApp Image 2026 06 04 at 9.55.29 AM WhatsApp Image 2026 06 04 at 9.55.29 AM 1
 WhatsApp Image 2026 06 04 at 9.55.29 AM 2 WhatsApp Image 2026 06 04 at 9.55.30 AM

"அழகான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான  சுற்றுலாத்தளம்"  என்ற கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் தேசிய நிகழ்விற்கமைய, தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் J/301 கோவில் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் லிகோரியார் தேவாலயத்தை அண்மித்த கடற்கரைப் பிரதேசமும் J/ 299- தனங்கிளப்பு கிராம அலுவலர் பிரிவில் சங்குப்பிட்டி பாலத்தை அண்மித்த கடற்கரை பிரதேசமும் சிரமதானம் மூலம் துப்புரவாக்கப்பட்டது. லிகோரியார் தேவாலயத்திற்கு அண்மையான கடற்கரையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் அவர்கள் கலந்து கொண்டு சுற்றுலாத்துறைக்கு முதன்மையான விடயமாக காணப்படும் இலங்கையின் அழகிய நீண்ட கடற்கரையை தூய்மையானதாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் வணக்கத்திற்குரிய லிகோரியார் தேவாலய பங்குத்தந்தை, தென்மராட்சி பிரதேச செயலாளர் F.C சத்தியசோதி அவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சாவகச்சேரி நகர சபையின் வட்டார உறுப்பினர், பொதுச் சுகாதார பரிசோதகர்,பிரஜாசக்தி தலைவர், சாவகச்சேரி நகர சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பொலிஸ் மற்றும் ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்."அழகான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான  சுற்றுலாத்தளம்"  என்ற கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் தேசிய நிகழ்விற்கமைய, தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் J/301 கோவில் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் லிகோரியார் தேவாலயத்தை அண்மித்த கடற்கரைப் பிரதேசமும் J/ 299- தனங்கிளப்பு கிராம அலுவலர் பிரிவில் சங்குப்பிட்டி பாலத்தை அண்மித்த கடற்கரை பிரதேசமும் சிரமதானம் மூலம் துப்புரவாக்கப்பட்டது. லிகோரியார் தேவாலயத்திற்கு அண்மையான கடற்கரையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் அவர்கள் கலந்து கொண்டு சுற்றுலாத்துறைக்கு முதன்மையான விடயமாக காணப்படும் இலங்கையின் அழகிய நீண்ட கடற்கரையை தூய்மையானதாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் வணக்கத்திற்குரிய லிகோரியார் தேவாலய பங்குத்தந்தை, தென்மராட்சி பிரதேச செயலாளர் F.C சத்தியசோதி அவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சாவகச்சேரி நகர சபையின் வட்டார உறுப்பினர், பொதுச் சுகாதார பரிசோதகர்,பிரஜாசக்தி தலைவர், சாவகச்சேரி நகர சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பொலிஸ் மற்றும் ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையான கடற்கரையில் இடம் பெற்ற நிகழ்வில் தனங்கிளப்பு பொதுமக்கள், பொதுச் சுகாதார பரிசோதகர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.

WhatsApp Image 2026 05 23 at 3.14.25 PM 1 WhatsApp Image 2026 05 23 at 3.14.29 PM 1

 

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top