யா/சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 12.02.2026 பி.ப 12.30 மணிக்கு பாடசாலையா/சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு  12.02.2026 பி.ப 12.30 மணிக்கு பாடசாலைஅதிபர் தலைமையில் நடைபெற்றது.  இதில் மாணவர்களது ஒழுக்க மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இதில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 WhatsApp Image 2026 02 16 at 09.51.29  WhatsApp Image 2026 02 16 at 09.50.43

தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் பொதுச்சபை நிறைவேற்றுக்குழுத் தெரிவுக் கூட்டமானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரின் பங்குபற்றுதலுடன் 11.02.2026 புதன்கிழமை மாலை 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலர், கணக்காளர், தலைமைப்பீட முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. தலைவராக செல்வி.சதாசிவம் நிலூஷிகா அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

 632668286 2118470475673906 5277723467807230379 n  633852036 2118470269007260 1322156941403138957 n
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி ஆரோக்கிய உணவக திறப்புவிழாவானது 06.02.2026 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திரு எப் சி சத்தியசோதி தலைமையில் ஆரம்பமாகியது .
இவ் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட செயலாளர் உயர்திரு ம.பிரதீபன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் திரு .பொ .ஸ்ரீ வர்ணன் மற்றும் பிரதி பணிப்பாளர் -குறுநிதி திரு மகேஷ் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.சமுர்த்தி ஆரோக்கிய உணவகத்தினை யாழ் மாவட்ட செயலாளர் உயர்திரு ம.பிரதீபன் அவர்களும் சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் திரு .பொ .ஸ்ரீ வர்ணன் , பிரதி பணிப்பாளர் -குறுநிதி திரு மகேஷ் பெர்னாண்டோ , பிரதேச சபை கௌரவ தவிசாளர் பொ.குகதாசன் மற்றும் பிரதேச செயலாளர் திரு எப் சி சத்தியசோதி ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
மேற்படி நிகழ்வினை தொடர்ந்து சமுர்த்தி தேசிய வலுவூட்டிடல் பயனாளிகளிற்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது .தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்த நிகழ்வில் மங்கள விளக்கேற்றலினை தொடர்ந்து வரவேற்புரையினை சமுர்த்தி தலைமப்பீட முகாமையாளர் அவர்களும் தலைமையுரையினை பிரதேச செயலாளர் அவர்களும் சிறப்பு விருந்தினர் உரையினை பிரதி பணிப்பாளர் -குறுநிதி திரு மகேஷ் பெர்னாண்டோ அவர்களும் பிரதம விருந்தினர் உரையினை யாழ் மாவட்ட செயலாளர் உயர்திரு ம.பிரதீபன் அவர்களும் நிகழ்த்தினார். பிரதம விருந்தினர் தனது உரையில் ஆரோக்கிய உணவகத்தின் ஊடாக பயனாளிகளின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தமுடியும் எனவும் ஆரோக்கிய உணவத்தினை ஆரம்பிப்பதன் மூலம் பயனாளிகளின் வாழ்கை தரத்தினை மேம்படுத்திடும் முயற்சிக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்ததோடு கலந்து கொண்டிருக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்தது விளங்க தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். கொடிகாமம் வங்கிற்குற்பட்ட பாடசாலை மாண்வர்களிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் சிப்தொர புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் அதனை தொடர்ந்து சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கான மெச்சுரை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது .
 630158272 2113175636203390 3793500295475851054 n  627669027 2113175466203407 8494795503876582380 n  628015594 2113203826200571 2216549612749693293 n

தென்மராட்சி பிரதேச செயலகம், நல்லூர் கிங்டம் லயன்ஸ் கழகம், தென்மராட்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன STS வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய கண்பரிசோதனை முகாமானது 08.02.2026 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு.F.C.சத்தியசோதி அவர்களும் லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் Dr.K.பத்மநாதன் அவர்களும், மாவட்ட கணனி தொழிநுட்ப ஆலோசகர், Dr.S.மனோகரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர். 230 வரையிலான பயனாளிகள் பங்குபெற்றி பயன்பெற்றதுடன் விசேடமாக கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள தேவையுள்ளவர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களுக்கான சிகிச்சையினை அவசியத்தன்மையின் அடிப்படையில் நல்லூர் கிங்டம் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் இலவசமாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது இந் நிகழ்வின் விசேட அம்சமாகும்.

 630881045 2116421305878823 1628008333414263720 n  630926065 2116421345878819 9067245564181488046 n  630558124 2116421422545478 228674059216511132 n
யா/கைதடி நுணாவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தரம் 9 , மாணவர்களுக்கான தொகுதி பாடத்தெரிவு மற்றும் தரம் 11 மாணவர்களுக்கான உயர்தர பாடத் தெரிவு தொடர்பான கருத்தரங்கு 03.02.2026 அன்று பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் தென்மராட்சி பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது.
                                                  WhatsApp Image 2026 02 06 at 09.48.53 1

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top