மக்கள் பங்குபற்றுதலுடன் கிராம மட்ட காணிப்பயன்பாட்டு திட்டம் தயாரிப்பதற்கான கலந்துரையாடல் பிரதேச செயலாளர் தலைமையில் கைதடி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் நவபுரம் சனசமூக நிலையத்தில் 24.06.2026ம் திகதி புதன்கிழமை மு.ப 9.00 மணிக்கு நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பல திணைக்களங்கள் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 WhatsApp Image 2026 06 30 at 9.28.52 AM  WhatsApp Image 2026 06 30 at 9.28.54 AM
 WhatsApp Image 2026 06 30 at 9.28.52 AM 1  WhatsApp Image 2026 06 30 at 9.28.55 AM

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கான டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பான ஆலோசனையும் வழிகாட்டலும் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு கடந்த 24, 25.06.2026 ஆம் திகதிகளில் தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன .

 WhatsApp Image 2026 06 30 at 9.52.10 AM  WhatsApp Image 2026 06 30 at 9.52.10 AM 2
 WhatsApp Image 2026 06 30 at 9.28.32 AM  WhatsApp Image 2026 06 30 at 9.28.34 AM

இரண்டாம் காலாண்டுக்குரிய பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழு கூட்டமானது 2026.06.18 (வியாழக்கிழமை) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் F.C .சத்தியசோதி அவர்கள் தலைமையில் பி.ப. 2.30 மணிக்கு ஆரம்பமாகியது. இக் கூட்டத்தில் வலயக்கல்விப் பணிமனை அதிகாரிகள், பொலிஸ் பொறுப்பதிகாரி (சாவகச்சேரி), சுகாதார பணிமனை அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதி நிதிகள், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் (கொடிகாமம்), மதுவரி உத்தியோகத்தர், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 WhatsApp Image 2026 06 19 at 8.32.43 AM 2  WhatsApp Image 2026 06 19 at 8.32.43 AM 1
 WhatsApp Image 2026 06 19 at 8.32.44 AM  WhatsApp Image 2026 06 19 at 8.32.44 AM 1

கோவை முகாமைத்துவத்தினூடாக உற்பத்தி திறனை மேம்படுத்தல் பயிற்சி நெறியானது 26.06.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி தொடக்கம் ந.ப 12.00 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. லாகினி நிரூபராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் வளவாளராக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்றுறை விரிவுரையாளர் இராசையா தனுஷன் அவர்கள் கலந்து கொண்டதுடன் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

 735346690 2241593160028303 3177883492831694432 n 735180829 2241593306694955 875409372198871540 n 

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான பயிற்சி நெறியானது 16.06.2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.லாகினி நிருபராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் வளவாளராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன் அவர்கள் கலந்து கொண்டார். இப் பயிற்சிநெறியில் கிராம அலுவலர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அலுவலர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்குபற்றினர் .

 WhatsApp Image 2026 06 17 at 3.41.21 PM WhatsApp Image 2026 06 17 at 3.41.20 PM 

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top