வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட 04 சக்கரநாற்காலிகள் மற்றும் 01 கழிவுக்கல சக்கர நாற்காலி ஆகியன மாற்றுத்திறனாளிகளுக்கு 17.08.2026 இன்று உதவிப்பிரதேச செயலாளர்,நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரால் வழங்கப்பட்டன.
![]() ![]() |
![]() |
![]() |
|
பிரதேச காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக்கூட்டம் மற்றும் பிரதேச காணிப் பயன்பாட்டுத்திட்டம் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் 17.08.2026ம் திகதி மு.ப 10.15 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், சாவகச்சேரி நகரசபை தவிசாளர், சாவகச்சேரி கமநல சேவைகள் நிலைய பெரும்பாக உத்தியோகத்தர், விவசாய போதனாசிரியர், கைதடி கமநல சேவைகள் நிலைய விவசாய போதனாசிரியர், அபிவிருத்தி உத்தியோகத்தர், வன பரிபாலனத் திணைக்கள மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், காணிக்கிளை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
![]() |
|
|
|
|






















