![]() |
![]() |
பாரம்பரிய மருத்துவர்களால் ஆயுர்வேத மருத்துவ முகாம் ஆனது 20.07.2026 திங்கட் கிழமை காலை 9.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாரம்பரிய மருத்துவர்கள் மற்றும் சமூக சித்த மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கியதுடன் பிரதேச செயலாளர், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இதனூடாக பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
![]() |
![]() |
|
|
|
தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் முயற்சியாளர்களுக்கு Business Clinic program ஆனது 17.07.2026ம் திகதி தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலக கணக்காளர் அ.கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சி.ஜெயஸ்ரீ அம்மையார், மாவட்ட செயலக சிறுகைத்தொழில் அபிவிருத்தி பிரிவு உதவி பணிப்பாளர் ச.சசீபன், வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் தலைவர் ஜஸ்மின் அம்மையார், மத்திய வங்கி- கிளிநொச்சி,மக்கள் வங்கி- சாவகச்சேரி, இலங்கை வங்கி-சாவகச்சேரி,commercial bank- Chavakachcheri, HNB, NSB, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை,தொழில்துறை திணைக்களம்,சுகாதார வைத்திய அதிகாரி-சாவகச்சேரி, பிரதேச சபை, நகர சபை, மின்சார சபை, விதாத வளநிலையம்,கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை, provincial industry மற்றும் Business Registration officer ஆகிய சேவை வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் 35 ற்கும் மேற்பட்ட சேவை வழங்கும் நிறுவனங்களும் 75 தொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வியாபாரப்பதிவு எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய நடைமுறைகளும், முயற்சியாளர்கள் தொழில் ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றினை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த வழிகாட்டல்களும், வங்கிக் கடன் குறித்த ஆலோசனைகளும் விபரங்களும் தொழில் முயற்சியாளர்களுக்கு விவரிக்கப்பட்டது.
![]() |
|
![]() |
![]() |
வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அனுசரணையில் பிரதேச பண்பாட்டுப்பேரவையும் வரணி கலாசார மத்திய நிலையமும் இணைந்து நடாத்திய பிரதேச ஆடிப்பிறப்பு விழா வரணி கலாசார மத்திய நிலையத்தில் பி.ப 3 மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வில் விருந்தினர்களாக பிரதேச செயலக கணக்காளர் திரு அ.கலைச்செல்வன் அவர்களும், சமுர்த்தி தலைமை பீடமுகாமையாளர் திருமதி ஜெ.வசந்தி அவர்களும், சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத்தலைவர் திரு சி.சுந்தரமூர்த்தி அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். வரணி குடும்ப முன்பள்ளி மாணவர்களும் கலாசார மத்திய நிலைய மாணவர்களும் கலைநிகழ்வுகளை வெகு சிறப்பாக ஆற்றியிருந்தனர்.
![]() |
![]() |
![]() |
|
|
![]() |
![]() |
|
|
![]() |
![]() |
|
|
|



































