இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்குSDGs அமைவாக, ( குறிப்பாக SDG 9: தொழிற்துறை, கண்டுபிடிப்பு மற்றும் உட்கட்டமைப்பு;SDG 11: நிலையான நகரங்களும் சமூகங்களும்)மிருசுவில் வடக்கு (J/335) கிராம அலுவலர் பிரிவில் மக்களின் நீண்டகால கோரிக்கையாகவிருந்த புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் (27.08.2026) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ க.இளங்குமரன் அவர்களால் ஆலய குருக்களின் ஆசியுடன் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.​போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 9.25 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.
​இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சாவகச்சேரி பிரதேச சபையின் வட்டார உறுப்பினர்கள், பிரஜா சக்தி அமைப்பின் தலைவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.​இவ்வீதிப் புனரமைப்பானது கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், பிரதேச மக்களின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்துக்கான வாய்ப்பை உறுதிசெய்கிறது.

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட 04 சக்கரநாற்காலிகள் மற்றும் 01 கழிவுக்கல சக்கர நாற்காலி ஆகியன மாற்றுத்திறனாளிகளுக்கு 17.08.2026 இன்று உதவிப்பிரதேச செயலாளர்,நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரால் வழங்கப்பட்டன.

 776747181 2285959765591642 5300067973210093949 n778550961 2285959768924975 86327769868849051 n  
நேர்மையான அரச சேவைக்கான நேர்மைக் கலாசாரம்' கிளீன் ஸ்ரீலங்கா தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்தல் நிகழ்வின் ஜந்தாம் நாள் நிகழ்வு - 31.07.2026
நிலையான நேர்மை மிக்க பசுமைக் கலாசாரம் எனும் தொனிப்பொருளில் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சிரமதானம் மற்றும் மரநடுகை இடம்பெற்றது.நேர்மை வாரத்திற்கு நேரொத்ததாக டெங்கு ஒழிப்பு சிரமதான நடிவடிக்கை எமது பிரதேச செயலக உட்புற மற்றும் வெளிப்புற வளாகத்தில் 31.07.2026 ஆந் திகதி பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.
 PHOTO 2026 07 27 08 44 56  PHOTO 2026 07 27 14 23 51 1 PHOTO 2026 07 28 12 02 06 Copy 

பிரதேச காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக்கூட்டம் மற்றும் பிரதேச காணிப் பயன்பாட்டுத்திட்டம் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் 17.08.2026ம் திகதி மு.ப 10.15 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், சாவகச்சேரி நகரசபை தவிசாளர், சாவகச்சேரி கமநல சேவைகள் நிலைய பெரும்பாக உத்தியோகத்தர், விவசாய போதனாசிரியர், கைதடி கமநல சேவைகள் நிலைய விவசாய போதனாசிரியர், அபிவிருத்தி உத்தியோகத்தர், வன பரிபாலனத் திணைக்கள மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், காணிக்கிளை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நேர்மையான அரச சேவைக்கான ' நேர்மைக் கலாசாரம்' கிளீன் ஸ்ரீலங்கா தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்தல் நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வு - 28.07.2026 நேர்மை மிக்க டிஜிட்டல் அரச சேவை எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஒழுங்கமைப்பில் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான விற்பனை சந்தை இடம்பெற்றது. Yaazhroots எனும் உள்ளூர் வாடிக்கையாளரை இணைக்கும் நிறுவனமானது இச் சந்தையில் பங்கு பற்றி Digital market இற்கான தொடர்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இவ் online market இல் எமது பிரதேச செயலக சிறுதொழில் முயற்சியாளர்கள் இணைந்து கொண்டனர். இதன் மூலமாக சிறுதொழில் முயற்சியாளர்கள் Digital market place மூலமாக அவர்களது உற்பத்திப் பொருட்களை உலக நாடுகளிற்கு விற்பனைப்படுத்தும் செயற்பாட்டிற்கான தளம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
 WhatsApp Image 2026 07 31 at 3.01.32 PM WhatsApp Image 2026 07 31 at 3.01.33 PM 

WhatsApp Image 2026 07 31 at 3.01.30 PM

  WhatsApp Image 2026 07 31 at 3.01.31 PM

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top