இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சாவகச்சேரிப் பிரதேச செயலகம், கைதடி சைவ ஐக்கிய சங்கம் , சிவபூமி திருவாசக அரண்மனை இணைந்து முன்னெடுத்த மகா சிவராத்திரி விழா நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனை அரங்கில் 15.02.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் அதிகாலை 4.30மணி வரை நடைபெற்றது .பிரதம விருந்தினராக தென்மராட்சி பிரதேச செயலாளர் திரு. F.C. சத்தியசோதி அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு.பொ.குகதாசன், கௌரவ உப தவிசாளர் திரு.இ.யோகேஸ்வரன் மற்றும் சாவகச்சேரி நகர சபை கௌரவ உப தவிசாளர் திரு.ஞா.கிசோர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.மகா சிவராத்திரி நிகழ்வுக்கான அருளுரையினைக் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கினார்கள்.வீரபத்திரர் அறநெறிப் பாடசாலை, மட்டுவில் இலஞ்சி ஆரணியம் அறநெறி பாடசாலை, கைதடி இயல்சேத்ரா கலைமன்றம், கைதடி பாரதி அறநெறி பாடசாலை, மட்டுவில் ஸ்ரீ நாராயணன் அறநெறி பாடசாலை, சாவகச்சேரி பழநி அறநெறி பாடசாலை, வீரகத்தி பிள்ளையார் அறநெறி பாடசாலை, கைதடி சைவ ஐக்கிய சங்கம் , லஜநாட்டியா நடனப்பள்ளி, கைதடி ஸ்ரீ நந்தகோபன் ஆர்வலன் பஜணைக்குழு , நீர்வேலி நீர்வைக் கந்தன் இதிகாசப் பாடசாலை , மட்டுவில் ஓம் நமசிவாய பஜனைக் குழு , பன்னாலையூர் தரன் பட்டிமன்றக் குழு, விவ பரத நடனப்பள்ளி மன்னார், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அறநெறி பாடசாலை, உரும்பிராய் ஜீவ ஜெயானந்த நர்த்தனாலயம் மற்றும் நல்லூர் ஸ்கந்தபதி கலாமன்றம் ஆகிய மன்றங்கள் இணைந்து கலைநிகழ்வுகளை வழங்கியிருந்தார்.