வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையம் நடாத்தும் கண்காட்சி - 2025 இன்று (25.02.2026) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு F.C . சத்தியசோதி தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாணப் பணிப்பாளர் (கிராம அபிவிருத்தி திணைக்களம் வடமாகாணம் ) திருமதி.பா.கஜானி அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் திருமதி. நிருபராஜ் லாகினி அவர்களும், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் திரு.பொன்னையா குகதாசன் அவர்களும், சாவகச்சேரி ஒருங்கிணைப்பு தலைவரின் இணைப்பாளர் திரு. காராளசிங்கம் பிரகாஸ் அவர்களும், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி S .சுனேத்திரா அவர்களும் கலந்து சிறப்பித்தனர் .
இவ் நிகழ்வில் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலை மனைப்பொருளியல் போன்ற பிரிவுகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
WhatsApp Image 2026 02 25 at 10.41.32  WhatsApp Image 2026 02 25 at 10.41.39 WhatsApp Image 2026 02 25 at 10.41.42 1 

எமது முன்னாள் உதவி பிரதேச செயலாளர் திருமதி தமிழினி சதீஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் ஞாபகார்த்தமாக தென்மராட்சி பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன் நடாத்தப்படும் இரத்ததான முகாமானது "உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

 639174025 2128386611348959 3226272735653794231 n  640272797 2128558494665104 1160437355970085516 n
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சாவகச்சேரிப் பிரதேச செயலகம், கைதடி சைவ ஐக்கிய சங்கம் , சிவபூமி திருவாசக அரண்மனை இணைந்து முன்னெடுத்த மகா சிவராத்திரி விழா நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனை அரங்கில் 15.02.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் அதிகாலை 4.30மணி வரை நடைபெற்றது .பிரதம விருந்தினராக தென்மராட்சி பிரதேச செயலாளர் திரு. F.C. சத்தியசோதி அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு.பொ.குகதாசன், கௌரவ உப தவிசாளர் திரு.இ.யோகேஸ்வரன் மற்றும் சாவகச்சேரி நகர சபை கௌரவ உப தவிசாளர் திரு.ஞா.கிசோர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.மகா சிவராத்திரி நிகழ்வுக்கான அருளுரையினைக் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கினார்கள்.வீரபத்திரர் அறநெறிப் பாடசாலை, மட்டுவில் இலஞ்சி ஆரணியம் அறநெறி பாடசாலை, கைதடி இயல்சேத்ரா கலைமன்றம், கைதடி பாரதி அறநெறி பாடசாலை, மட்டுவில் ஸ்ரீ நாராயணன் அறநெறி பாடசாலை, சாவகச்சேரி பழநி அறநெறி பாடசாலை, வீரகத்தி பிள்ளையார் அறநெறி பாடசாலை, கைதடி சைவ ஐக்கிய சங்கம் , லஜநாட்டியா நடனப்பள்ளி, கைதடி ஸ்ரீ நந்தகோபன் ஆர்வலன் பஜணைக்குழு , நீர்வேலி நீர்வைக் கந்தன் இதிகாசப் பாடசாலை , மட்டுவில் ஓம் நமசிவாய பஜனைக் குழு , பன்னாலையூர் தரன் பட்டிமன்றக் குழு, விவ பரத நடனப்பள்ளி மன்னார், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அறநெறி பாடசாலை, உரும்பிராய் ஜீவ ஜெயானந்த நர்த்தனாலயம் மற்றும் நல்லூர் ஸ்கந்தபதி கலாமன்றம் ஆகிய மன்றங்கள் இணைந்து கலைநிகழ்வுகளை வழங்கியிருந்தார்.
 WhatsApp Image 2026 02 18 at 14.03.38  WhatsApp Image 2026 02 18 at 13.58.38  WhatsApp Image 2026 02 18 at 13.58.36 1

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களான முச்சக்கர வண்டி, கழிவுகல நாற்காலி, காற்றுமெத்தை மற்றும் motivation சக்கர நாற்காலி ஆகியன வழங்கப்பட்டதுடன் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கான மின்சார உபகரணங்களை திருத்துவதற்கான உபகரணங்கள் மற்றும் வெல்டிங் உபகரணங்கள் 19.02.2026 அன்றைய தினம் பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

 WhatsApp Image 2026 02 19 at 16.13.47  WhatsApp Image 2026 02 19 at 16.12.53

சந்திரபுரம் J/315 கிராம அலுவலர் பிரிவில் 2026.02.13 வெள்ளிக்கிழமை பி.ப. 3.30 மணிக்கு சந்திரபுரம் சிறுவர் கழகத்தை வலுவூட்டும் நிகழ்வு சந்திரபுரம் கிராம அலுவலர் பணிமனை மண்டபத்தில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அவர்கள் சிறுவர் பாதுகாப்பு, கல்வியின் முக்கியத்துவம், சிறுவர் கழக நடைமுறைகள் தொடர்பான கருத்துக்களை சிறுவர் கழக சிறுவர்களிற்கு எடுத்துக் கூறினார்.

 WhatsApp Image 2026 02 16 at 09.52.27  WhatsApp Image 2026 02 16 at 09.52.28

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top