இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்குSDGs அமைவாக, ( குறிப்பாக SDG 9: தொழிற்துறை, கண்டுபிடிப்பு மற்றும் உட்கட்டமைப்பு;SDG 11: நிலையான நகரங்களும் சமூகங்களும்)மிருசுவில் வடக்கு (J/335) கிராம அலுவலர் பிரிவில் மக்களின் நீண்டகால கோரிக்கையாகவிருந்த புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் (27.08.2026) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ க.இளங்குமரன் அவர்களால் ஆலய குருக்களின் ஆசியுடன் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.​போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 9.25 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.
​இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சாவகச்சேரி பிரதேச சபையின் வட்டார உறுப்பினர்கள், பிரஜா சக்தி அமைப்பின் தலைவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.​இவ்வீதிப் புனரமைப்பானது கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், பிரதேச மக்களின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்துக்கான வாய்ப்பை உறுதிசெய்கிறது.

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top