சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சாவகச்சேரி நகரப்பிரதேசத்தில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு இன்று (31/05/2024) இடம்பெற்றது. தென்மராட்சி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர்திருமதி தமிழினி சதீஷ் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். ADIC நிறுவன மாவட்ட இணைப்பாளர் திரு A.கோடீஸ்வரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
![]() |
![]() |
|
|
யா/மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயத்தில் 2024.05. 03 (வெள்ளிக்க்கிழமை) அன்று விழிப்புணர்வு கருத்தரங்கானது மதியம் 12.00 மணியளவில் பாடசாலை அதிபர் தலைமையில் ஆரம்பமாகி இடம் பெற்றது. இக்கருத்தரங்கில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், வளவாளராக பங்கு பற்றி சிறுவர் பாதுகாப்பு, மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம் தொடர்பாக கருத்துரை வழங்கினார்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையின் கீழ் தென்மராட்சி பிதேச செயலகத்தின் கலாசார பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட மாதாந்த கலை கலாசார மேம்பாட்டு நிகழ்வு வரிசையில் வைகாசி பொங்கல் நிகழ்வு கச்சாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 2024.05.17 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. இதில் அலுவலக உத்தியோகத்தர்கள், ஆலய பரிபாலான சபையினர், ஆலய பக்தர்கள், கச்சாய் சிறுவர் சமூக சிறுவர்கள் ஆகியோர்கள் பங்குப்பற்றியிருந்தனர். சிறுவர்கள் கலைநிகழ்வுகளை ஆற்றியிருந்ததுடன் அவற்றுக்காக பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
![]() |
|
எமது பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அலுவலக நடைமுறைகள் தொடர்பான பயிற்சி நெறி 30.04.2024 அன்று உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திரு.கி.அமல்ராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.


















