அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம் என்னும் தொனிப்பொருளில் 2024ம் ஆண்டிற்கான மகளிர் தின விழாவானது தென்மராட்சி பிரதேச செயலத்தில் 26.03.2024 அன்று மு.ப 9.30 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக திருமதி Dr.கமலா ஜெகூ (பொது வைத்திய நிபுணர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை) அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக திருமதி சுகிர்தன் குகப்பிரியா (சட்டத்தரணி சட்ட அலுவலர்), திருமதி லலிதாமலர் முகுந்தன் (அதிபர் யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி), திரு யூட் நிஷாந்தன் (முகாமையாளர் உலக தரிசன நிறுவனம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.கௌரவ விருந்தினராக கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி (உலக பசி ஒழிப்பு மன்றம் கனடா) அவர்களும் கலந்துகொண்டார்.இதில் சிறப்புரைகள் ,சாதனைப் பெண்கள் கௌரவிப்பு நிகழ்வும் மற்றும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது
















