சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் 26.08.2024 அன்று விற்பனை சந்தை நடைபெற்றது. இந் நிகழ்வில் 20 முயற்சியாளர்கள் பங்கு பற்றினார்கள்.
![]() |
![]() |
தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி திணைக்களத்தின் நிதி அனுசரணையில் தென்மராட்சி கிழக்கில் உள்ள பத்து கிராமிய பாடசாலை மாணவர்களை ஒருங்கிணைத்து யா/உசன் இராமநாதன் பாடசாலையில் 22.08.2024 வியாழக்கிழமை தரம் 05 மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.இக் கருத்தரங்கில் உதவி பிரதேச செயலாளர், ஆசிரிய ஆலோசகர், பாடசாலை அதிபர், ஏனைய பாடசாலை ஆசிரியர்கள்,சமுர்த்தி முகாமையாளர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள்,CBO அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 100 மாணவர்கள் கலந்து பயன்பெற்ற இக் கருத்தரங்கில் வளவாளராக யா/உசன் இராமநாதன் பாடசாலை ஆசிரியர் திரு சி.ஜெயந்தன் அவர்கள் சிறப்பான முறையில் கடமையாற்றினார்.
|
![]() |

தேசிய தொழில் முயற்சி அதிகாரசபையின் (NEDA) நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான Fashion Jewels Making பயிற்சி நெறியானது இன்றைய தினம் 22/08/2024 சாவகச்சேரி J/300 கிராம சேவையாளர் அலுவலகத்தில் 1ம் நாள் பயிற்சி நெறியானது நடைபெற்றது. திருமதி சத்தியநிதி கவிதா வளவாளராக கலந்து கொண்டு பயிற்சி நெறியினை முன்னெடுத்தார்.
|
|
கல்வி அமைச்சினால் ஏற்படும் செய்யப்பட்டு நடாத்தப்பட்ட 2024ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கணணி, ஆங்கிலம் மற்றும் தொழில் வழிகாட்டல் தொடர்பான பயிற்சி நெறிகளை முடித்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யா/வரணி மத்திய கல்லூரியில் 23.07.2024 பாடசாலை அதிபர் தலைமையில் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடாத்தப்பட்டது.



















