தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 2026.06.03 புதன்கிழமை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கௌரவ க .இளங்குமரன் (பா .உ ) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது . இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் திரு. F. C சத்திய சோதி,சாவகச்சேரி நகரசபை தவிசாளர், உபதவிசாளர், சாவகச்சேரி பிரதேசபையின் தவிசாளர் , உபதவிசாளர் மற்றும் நகரசபை மற்றும் பிரதேச சபையின் அழைக்கப்பட்ட கௌரவ உறுப்பினர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள் /பிரதிநிதிகள், சாவகச்சேரி ,கொடிகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் அழைக்கப்பட்ட சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அவர்கள், தென்மராட்சி பிரதேசம் பரந்த நிலப்பரப்பை கொண்ட 60 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி காணப்படுவதால் அதிகமான தேவைகளை கொண்டிருப்பதாகவும் இப்பிரதேச செயலகத்தை இரண்டு பிரதேச செயலகங்களாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்முயற்சிகள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார். இக்கூட்டத்தில் தொழில் முயற்சிக்கான அரசகாணி வழங்கல் ,பிரதேச தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான செயற்றிட் டங்கள்,முன்னுரிமை அடிப்படையில் புனரமைக்கப்பட வேண்டிய பிரதேச சபையின் மற்றும் நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகள், வயல் காணியை வீட்டுத்திட்ட நோக்கத்திற்காக (குடியிருப்பு நோக்கத்திற்காக ) மேட்டுக்காணியாக மாற்றுவதற்கு விண்ணப்பித்த ஒருவருக்கான அனுமதி என்பவற்றிற்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து வெள்ளநீர் தேங்கி நிற்கும் பகுதிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது . மேலும் 28.01.2026 அன்று இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது. அத்துடன் சுன்னாகம் சாவகச்சேரி பஸ் சேவையினை கொடிகாமம் வரை நீடித்தல் நெல்லியடி - கொடிகாமம் பஸ் சேவையினை சாவகச்சேரி வரை நீடித்தல், i - road செயற்றிடங்களில் உள்வாங்கப்பட்ட வீதிப்பகுதியில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் விநியோக மார்க்கங்களை நிறுவுதல் ,கட ற்கரையோர கிராமங்களிற்கான குடிநீர் விநியோக விஸ்தரிப்பு, பிரதேசத்தில் பன்றி நெற்களையினை கட்டுப்படுத்துதல் , சாவகச்சேரி மற்றும் சரசாலை சித்த மத்திய மருந்தகங்களை தொடர்ச்சியாக இயங்கச் செய்தல் ,கச்சாய் கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் கோரிக்கை ,கைதடி நாவற்குழி மீனவர் கடலுக்குச் செல்லும் மற்றும் வலை உலர்த்தும் இடத்திற்கான மண் நிரப்புதல் வரணி குடத்தனை வீதிப் புனரமைப்பு பணிகள் தாமதமடைவதால் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், clean srilanka வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது . DCB நிகழ்ச்சித் திட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களால் 14செயற்றிட்டங்களிற்கு 3.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு அமைச்சால் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், கௌரவ இராமநாதன் அர்ச்சுனா (பா .உ ) அவர்களால் எமது பிரிவுக்குட்பட்ட நான்கு விளையாட்டுகழகங்களின் அபிவிருத்திக்காக தலா 2மில்லியன் ரூபாய் வீதம் 8மில்லியன் ரூபாய் வேலைத்திட்டம் முன் மொழியப்பட்டிருப்பதாகவும் அமைச்சின் அனுமதி கிடைக்குமிடத்து இவையும் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கௌரவ G.G. பொன்னம்பலம் (பா .உ ) அவர்களால் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையை தரம் உயர்த்துதல் ,விசேட மருத்துவப் பிரிவுகளை உருவாக்குதல் அதற்கான மேலதிக ஆளணி கட்டமைப்புகளையும் சுயாதீன நிதிக்கையாள்கைக்கான தனியான கணக்காளர் நியமனம் தொடர்பாகவும் சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையை இரண்டாக்க பிரித்து செயற்படுத்துவது தொடர்பாகவும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தல் தொடர்பாகவும் மருத்துவ சுகாதார ஆளணி வெற்றிடங்களை பூர்த்தி செய்தல் தொடர்பாகவும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை சபையில் சமர்பிக்கப்பட்டதுடன் கொடிகாமம் வைத்தியசாலையின் ஆளணி வெற்றிடத்தை பூர்த்தி செய்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டமானது பி .ப 12.30 மணியளவில் பிரதேச செயலாளரின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.
 WhatsApp Image 2026 06 08 at 10.18.21 AM WhatsApp Image 2026 06 08 at 10.19.32 AM 3  WhatsApp Image 2026 06 08 at 10.19.33 AM 
 

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top