கோவை முகாமைத்துவத்தினூடாக உற்பத்தி திறனை மேம்படுத்தல் பயிற்சி நெறியானது 26.06.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி தொடக்கம் ந.ப 12.00 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. லாகினி நிரூபராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் வளவாளராக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்றுறை விரிவுரையாளர் இராசையா தனுஷன் அவர்கள் கலந்து கொண்டதுடன் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
![]() |
|
















