தொழில்பயிற்சி அதிகாரசபையுடன் இணைந்து தென்மராட்சி விதாதா வளநிலையத்தால் நடாத்தப்பட்ட பயிற்சிநெறியை பூரணமாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் 05.02.2025 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

481507916 1827660724754884 7413191396153074020 n

"அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்" திட்டத்தை செயற்படுத்துவதற்கான தேசிய ரீதியிலான கடற்கரையை சுத்தப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் "க்ளீன் ஸ்ரீலங்கா" நிகழ்ச்சி த்திட்டத்தின் கீழ் கடற்கரையினை சுத்தப்படுத்தல் நிகழ்வானது 23.02.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணி முதல் நண்பகல் 11.30 மணி எமது பிரதேச செயலக ரீதியாக கைதடி நாவற்குழி (J/297) கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது.அந்த வகையில் இவ் நிகழ்வாது கடற்கரைப்பகுதியின் 1 கி.மீ பகுதியை சுத்தம் செய்யும் நிகழ்வு எமது பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பாதுகாப்பு படையினர்,பொலிஸ் உத்தியோகத்தர்கள்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கடற்கரையினை துப்பரவு செய்தார்கள். 
 480929324 1821830965337860 4590227264193165167 n  
480691209 1821830962004527 364164322049886638 n

பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழு கூட்டமானது 2025.02.10 (திங்கட்கிழமை) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் பி.ப 3.15 மணியளவில் ஆரம்பமாகி இடம் பெற்றது. இக் கலந்துரையாடலில் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகள் தொடர்பாகவும்,சிறுவர் பெண்கள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டது. இதில் சுகாதார வைத்திய அதிகாரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் , அரச சார்பற்ற நிறுவனத்தினர், தனியார் கல்வி நிலைய இயக்குநர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து யா/யாழ்ப்பா ம் மத்திய கல்லூரி யில் 2025.02.14ம் திகதி அன்று நடாத்தி ய "அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப்போட்டி - 2025 இல் எமது பிரதேச செயலகம் சார்பில் பங்கு பற்றிய நவீல்ட் பாடசாலை மாணவர்கள் 8 முதலாம் இடங்களையும், 10 இரண்டாம் இடங்களையும் மற்றும் 7 மூன்றாம் இடங்களையும் பெற்றுக்கொண்டார்கள். ஒட்டு மொத்தமாக எமது பிரதேச செயலகம் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

481084282 1816989749155315 4492164312225512647 n

தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச்சங்க பொதுச்சபை நிர்வாகதெரிவு கூட்டமானது மாவட்ட பணிப்பாளரின் பங்குபற்றுதலுடன் 05.02.2025 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் ,பிரதேசசெயலாளர், உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர், மாவட்ட கண்காணிப்பு முகாமையாளர், தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், கட்டுப்பாட்டுசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 2025 ம் ஆண்டுக்கான புதிய தலைவராக சாவகச்சேரி வங்கியை சேர்ந்த ம.விவேகானந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top