தென்மராட்சி சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் சாவகச்சேரி நகர் கிராம அலுவலர் பொது மண்டபத்தில் சிறு கைத்தொழிலில் ஈடுபடுகின்ற முயற்சியாளர்களுக்கு 23.04.2025 அன்று வணிகத் திட்டமிடல்( business plan) பயிற்சி நிகழ்வும் 24.04.2025 அன்று marketing management program நடைபெற்றது.

சமுர்த்தி சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும் சிறுதொழில் அபிவிருத்திப் பிரிவும் இணைந்து நடாத்திய புத்தாண்டுக் கண்காட்சியும் விற்பனைச்சந்தையும் தென்மராட்சி பிரதேச நகரசபை மண்டபத்தில் 09.04.2025 புதன் மற்றும் 10.04.2025 வியாழன் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வு 09.04 2025 காலை 9.30 மணியளவில் தலைமையக முகாமையாளர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்களும் சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி நகராட்சி மன்ற செயலாளர் அவர்களும் இனிய விருந்தினர்களாக பிரதேச செயலக கணக்காளர், மற்றும் சாவகச்சேரி இலங்கை வங்கி முகாமையாளர், சாவகச்சேரி தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர், சாவகச்சேரி மக்கள் வங்கி முகாமையாளர், SMIB முகாமையாளர், சமுர்த்தி வங்கிச்சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர். மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தொழில் முயற்சியாளர்கள் , சமுர்த்தி பயனாளிகள், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

 489957061 1856635798524043 7672437244725387358 n  489851679 1856635801857376 9218743929874758530 n
 489957061 1856635798524043 7672437244725387358 n  489958677 1856635738524049 1166349204589167004 n
2025.04.16 ஆந் திகதி பிரதேச காணிப்பயன்பாட்டுக் குழுக்கூட்டம் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
 
இவ் கூட்டத்தில் பிரதேச செயலாளர், சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகு பீடாதிபதி, காணி உத்தியோகத்தர், குடியேற்ற உத்தியோகத்தர், காணி பயன்பாட்டு திட்டமிடல் உத்தியோகத்தர், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர், காணிக்கிளை பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர், கைதடி தெற்கு, கைதடி தென்கிழக்கு, இடைக்குறிச்சி, கரம்பகம், மிருசுவில் தெற்கு, நாவற்குழி மேற்கு, கொடிகாமம் வடக்கு, கொடிகாமம் மத்தி ஆகிய பிரிவுகளை சார்ந்த கிராம அலுவலர்கள் பங்குபற்றியிருந்தனர்.

யா/ மட்டுவில் சந்திர மௌலீசா பாடசாலை சாதாரண தர மாணவர்களுக்கான உயர்தர பாடத்துறைகள் மற்றும் தொழிற் கற்கை நெறிகள் தொடர்பான கலந்துரையாடல் 03.04.2025 பாடசாலை பிரதி அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் தென்மராட்சி பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் இணைந்து நடாத்தப்பட்டது.

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top