தென்மராட்சி சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் கைதடி தொழில் பயிற்சி அதிகாரசபையில் 26.03.2025 அன்று இளைஞர் யுவதிகளுக்கு எதிர் காலத்தில் சிறுகைத்தொழிலினை ஆரம்பித்து செயற்படுத்துவதற்கான வழிகாட்டல் கருத்தரங்கு சிறுகைத்தொழில் உதவி பணிப்பாளரினால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் 40 முயற்சியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

![]() ![]() |
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான காலை உணவு வழங்குதல் தொடர்பான கலந்துரையாடலானது 26.03.2025 காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறுவர் பெண்கள் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தலைமையில் இடம் பெற்றது.இக் கலந்துரையாடலில் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தரால் காலை உணவு வழங்குதல் தொடர்பான ஆலோசனையும் அது தொடர்பான அறிவுறுத்துதல்களும் வழங்கப்பட்டது. இதில் காலை உணவு வழங்கப்படுகின்ற முன்பள்ளிகளிகளின் ஆசிரியர்கள், முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
![]() |
|
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்தின வாரத்தின் ஒரு நிகழ்வாக கோயிற்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் 07/03/2025 வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வை திட்டமிடல் பணிப்பாளர் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதில் குறிப்பிட்ட கிராம மட்ட உத்தியோகத்தர்கள் , சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.























