தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச்சங்க பொதுச்சபை நிர்வாகதெரிவு கூட்டமானது மாவட்ட பணிப்பாளரின் பங்குபற்றுதலுடன் 05.02.2025 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் ,பிரதேசசெயலாளர், உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர், மாவட்ட கண்காணிப்பு முகாமையாளர், தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், கட்டுப்பாட்டுசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 2025 ம் ஆண்டுக்கான புதிய தலைவராக சாவகச்சேரி வங்கியை சேர்ந்த ம.விவேகானந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.















