தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது தலைமையக முகாமையாளர் தலைமையில் 23.06.2026 செவ்வாய்க்கிழமை மாலை 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் முகாமைத்துவப்பணிப்பாளர், கருத்திட்டமுகாமையாளர், வங்கிமுகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 2026 ம் ஆண்டிற்கான கெக்குலு சிறுவர் கழக போட்டி , போதை ஒழிப்பு சேமிப்பு வேலைத்திட்டம் மற்றும் குடும்ப வலுப்படுத்தல் வேலைத்திட்ட முன்னேற்றங்கள் தொடர்பாக பிரிவு ரீதியாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
![]() |
![]() |

















