மாற்றுத்திறனாளிகளுக்கான யாழ்ப்பாண மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப்போட்டி 09.06.2026 ஆம் திகதி அன்று இடம் பெற்றது. இதில் சாவகச்சேரி சிவபூமி பாடசாலையிலிருந்து கலந்து வெற்றியீட்டிய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு 02.07.2026 இன்று சிவபூமி பாடசாலையில் அதிபர் தலைமையில் இடம் பெற்றது.இதில் தென்மராட்சி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து வீரவீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் என்பன வழங்கி கெளரவித்தனர்.
![]() |
















