"தமக்கென ஒரு இடம் -அழகான வாழ்க்கை" என்ற தொனிப் பொருளின் கீழ் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள குடியமர்ந்த மக்களில் நீண்ட காலமாக தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு பாதுகாப்பானதொரு வசிப்பிடத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் யாழ் மாவட்டத்தில் வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலை திட்டம் தென்மராட்சியில் 2026.01.16 வெள்ளிக்கிழமை அன்று அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி பங்களிப்பில்( ஒரு வீட்டிற்கு ரூபாய் இரண்டு மில்லியன்) மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேலைத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல் 2026.01.16 அன்று J/318 -மீசாலை கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் சம்பிரதாயபூர்வமாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் நாட்டப்பட்டது. அப்பயனாளியினால் பூரணப்படுத்தப்பட்ட வீட்டின் புதுமனை நிகழ்வு 2026.04.28 செவ்வாய்க்கிழமை இன்றைய தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் (பா.உ) அவர்களும் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ கருணநாதன் இளங்குமரன் (பா.உ) அவர்களும் தென்மராட்சி பிரதேச செயலாளர் உயர்திரு F.C சத்தியசோதி அவர்களும் உதவி பிரதேச செயலாளர் திருமதி நி.லாகினி அவர்களும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு இ.திலீபன் அவர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
![]() |
|
















