இலங்கை சமூக பாதுகாப்பு ஆரஸ்ஸாவ ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து பரீட்சைகளில் (O/L , A/L) சித்தி பெற்ற மாணவர்களுக்கான மேலதிக பிரதிபலன் கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு 24/07/2023 திங்கள் கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்களால் மாணவர்களுக்கும் வருகை தராத மாணவர்களுடைய காசோலைகள் அவர்களது பெற்றோர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
![]() |
![]() |
14.07.2023 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக பிரதேச செயலக கணக்காளர் அவர்கள் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கிராம அலுவலர்கள், கிராம மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

![]() |
![]() |
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தேசிய விருது வழங்கும் நிகழ்வானது திருகோணமலை மாவட்டத்தில் JKAB Beach Resort மாநாட்டு மண்டபத்தில் 13.07.2023 காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பணசேகரிப்பு அடிப்படையில் எமது பிரதேசசெயலகம் தேசிய ரீதியில் 3 வது இடத்தினை பெற்றுக்கொண்டது.. இவ் நிகழ்வில் எமது பிரதேச செயலகம் சார்பாக உதவி பிரதேசசெயலாளர் திருமதி தமிழினி சதீஸ் , சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி வி .முகுந்தன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்(சமூக பாதுகாப்பு சபை ) திருமதி லோகநிதியா ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை பெற்று கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |

























