சுற்றாடல் தினத்தை முன்னிட்டு J/312 கிராம அலுவலர் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வானது Alliance finance company PLC சாவகச்சேரி கிளையின் அனுசரணை உடன் "சூழலை சுத்தமாக வைத்திருத்தலும் மரங்களை நாட்டுதலும் "என்னும் தொனிப்பொருளில் மட்டுவில் கல்வம் சந்திரமௌலீஸ்வரர் ஆலய சூழலில் 09.06.2023 வெள்ளிக் கிழமை நடைபெற்றது.இந் நிகழ்வில் Alliance finance company PLC சாவகச்சேரி முகாமையாளர் ,J/312,J/315 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளின் கிராம மட்ட உத்தியோகத்தர்களும் மற்றும் சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
![]() |
|
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
|
![]() |
![]() |
![]() |
|
22.04.2023 சனிக் கிழமை அன்று எழுதுமட்டுவாழ் வடக்கு,கரம்பக்குறிச்சி,வரணி வடக்கு மற்றும் நாவற்காடு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் ஏற்பட்ட மினி சூறாவளியின் தாக்கம் காரணமாக 16 குடும்பங்களை சேர்ந்த 56 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேற்குறித்த குடும்பங்களின் வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளதுடன் இவர்களின் வழிபாட்டு தலமான கரம்பைக்குறிச்சி கிழக்கு அண்ணமார் கோயில் மற்றும் எழுதுமட்டுவாழ் வடக்கு பொது நோக்கு மண்டபம் ஆகியன கடுமையான பாதிப்புக்குள்ளாகியது.
![]() |
![]() |
![]() |
![]() |
J/332 கெற்பேலி கிராம அலுவலர் பிரிவில் 07.03.2023 செவ்வாய்க்கிழமை பாடசாலை செல்லும் மாணவர்களுடைய பெற்றோர்களுக்கான கலந்துரையாடல் மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது. இதில் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு பெற்றோர்களின் பங்களிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
![]() |
![]() |






























