தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற "தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம்" 2025-2027ம் ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்ட Clean Sri lanka வேலைத் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற சமுதாய உற்பத்தித்திறன் மாதிரிக் கிராம திட்டத்தில் எமது பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்குமான அடிப்படை விழிப்புணர்வு மற்றும் கிராம அபிவிருத்தி திட்டம் தயாரித்தல் தொடர்பான நிகழ்வு 16.12.2025 ஆம் திகதி பி. ப 2.00 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் மந்துவில் கிழக்கு முன்பள்ளியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மதகுரு, பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரின் இணைப்பாளர், தினணக்களம் சார் உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புகள், 50 குடும்பங்கள் சார் அங்கத்தவர்கள் மற்றும் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறுவர் கழகங்களினை வலுப்படுத்தல் மற்றும் தலைமைத்துவம் மற்றும் இணைய பாவனை தொடர்பான பயிற்சி செயலமர்வு மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் 05.12.2025 வெள்ளிக்கிழமை மாலை 2.00 மணிக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதிகல்விப் பணிப்பாளர் ,சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமமட்ட சிறுவர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் வளவாளராக தென்மராட்சி வலயக்கல்வி பணிப்பாளர் ப.பரணீதரன் சிறந்த முறையில் பயிற்சியளித்தார்.
|
சமுர்த்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் கெற்பேலி கிராம பிரிவில் [1,000,000] ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான வீடுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தோ.தேவராசா அவர்களின் இல்லத்தில் வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா 27.11.2025 வெள்ளி மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வில் தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், வங்கி முகாமையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
விசேட பிரதேச மட்ட காணிபயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டம் 18.11.2025 செவ்வாய்க் கிழமை பி.ப 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர், பிரதேச சபை தவிசாளர் நகரசபை செயலாளர், வனபரிபாலனத் திணைக்கள மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலர்கள், கமநல சேவை நிலைய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், கிராம அலுவலர்கள், கமக்கார அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் காணிக் கிளை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இதில் வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டு கையகப்படுத்தப்பட்ட காணிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள காணிகள் மற்றும் பொது தேவைக்கு ஒதுக்கப்பட்ட காணிகள் உள்ளடங்குவதனால் அக்காணிகள் விடுவித்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
![]() |

















