இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2024 ம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு 16.10.2025வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் JKAB Beach resort மண்டபத்தில் நடைபெற்றது .
இதில் எமது பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி அவர்களுக்கு சமுர்த்தி பணிப்பாளராக கடமையாற்றிய காலத்திற்குரிய தேசிய விருதும் எமதுபிரதேச செயலகம் பண சேகரிப்பு அடிப்படையில் குறிப்பிட்ட இலக்கினை அடைந்தமைக்காக முன்னாள் பிரதேச செயலாளர் உஷா சுபலிங்கம் அவர்களுக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர் (சமூக பாதுகாப்பு) அவர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
![]() |
![]() |
பிரதேச செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் வாணி விழாவும் கும்பம் சரித்தல் நிகழ்வும் நேற்றைய தினம் 02.10.2025 வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை 9 மணியளவில் உத்தியோகத்தர்களுக்கிடையிலான தோரணம் பின்னுதல் மற்றும் மாலை கட்டுதல் போட்டி நடைபெற்றதை தொடர்ந்து பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.தொடர்ந்து பிரதேச செயலாளர் திரு F.C சத்தியசோதி அவர்களினால் வித்தியாரம்பம் நடைபெற்று கும்பம் சரித்தல் நிகழ்வு இடம்பெற்றது .தொடர்ந்து கலைநிகழ்வுகளும் பிரசாதமும் வழங்கப்பட்டு நிறைவுற்றது.

Lanka Government Cloud இல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடைப்பட்டிருந்த சேவைகள் (பிறப்பு ,இறப்பு ,விவாகம் மற்றும் வாகன வரி ) மீள இயங்க ஆரம்பித்துள்ளன.வழமை போன்று சேவை பெறுநர்கள் மேற்குறித்த சேவைகளை பெற்று கொள்ளமுடியும் .
எமது தென்மராட்சி பிரதேச உதவிப் பிரதேச செயலாளராக திருமதி லாகினி நிருபராஜ் அவர்கள் இன்றைய தினம் (01.10.2025) தமது கடமையினை பொறுப்பேற்றார்.உதவிப் பிரதேச செயலாளர் அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம் .




















