இன்று கைதடி சித்த மருத்துவ பீடத்தினரால் பிரதேச செயலாளர் தலமையில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்ட து. அத்துடன் சமூக சித்த மருத்துவர்களால்  இரத்தப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. 

 WhatsApp Image 2025 12 23 at 15.06.25 1   WhatsApp Image 2025 12 23 at 15.06.25 2 
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான பெறுகை தொடர்பான பயிற்சி நெறியானது இன்றைய தினம் 22.12.2025  மு.ப 10.30 க்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  பிரதேச செயலாளர் F.C.சத்தியசோதி அவர்களின் தலைமையில்  ஆரம்பமானது.
இப்பயிற்சி நெறியின் வளவாளராக  யாழ்ப்பாண மாவட்ட செயலக கணக்காளர்(பெறுகை அலகு) வ.சுபாசன் அவர்கள் கலந்து கொண்டதுடன்   இப்பயிற்சி நெறியில் எமது பிரதேச செயலகத்தின்  உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
 WhatsApp Image 2025 12 23 at 15.06.03    WhatsApp Image 2025 12 23 at 15.06.04

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் நிதி அனுசரணையுடன் நாவற்குழி மேற்கு,நாவற்குழி தெற்கு மற்றும் மந்துவில் கிழக்கு கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள பெற்றோர்களுக்கான கிராம மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு, பெண்களுக்கான வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்கு 12.12.2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 -1.00 மணிவரை நாவற்குழி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.இதில் வளவாளராக S.சிவதாஸ் (உளநல மருத்துவர்) கலந்துகொண்டார்.இந் நிகழ்வில் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள்,கிராமமட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். 

 601859098 2071038413750446 1705945740552889451 n 601352971 2071038540417100 4660250573009491999 n  

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கொடிகாமம் சமுர்த்தி வங்கியின் போதைப்பொருள் எதிர்ப்பு கொடிதின சேமிப்பு நிதியிலிருந்து உசன் கிராமபிரிவை சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கான 42,500.00 ரூபா மற்றும் 42,000.00 ரூபா பெறுமதியான  இரண்டு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் 19.11.2025 வெள்ளிக்கிழமை மாலை 1.00 மணிக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், கொடையாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 WhatsApp Image 2025 12 23 at 16.13.13    WhatsApp Image 2025 12 23 at 16.13.55

Fairmed நிறுவனத்தின் அனுசரணையுடன் மாற்றுவலுவுள்ளோரை பராமரிப்பவர்களுக்கான உள சமூக ஆற்றுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு பிரதேச செயலாளர் திரு பிரான்சிஸ் சந்திரா சத்யசோதி அவர்கள் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 18.12.2025 இன்று இடம்பெற்றது,இந்நிகழ்வின் வளவாளராக மருதங்கேணி அம்பன் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் க. சிவசுதன் பங்குபற்றி கருத்துரை வழங்கினார் இந்நிகழ்வில் 30 மாற்றுவலுவுள்ளவர்களை பராமரிப்பவர்களும் பங்குபற்றியிருந்தனர். 

 600196389 2071037240417230 7064184706826674792 n    599709897 2071037303750557 2264955789156286768 n

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top