மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களமும் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடாத்திய பிரதேச தொழில் முனைவோரிற்கான சந்தை நிகழ்வு 14.06.2024 வெள்ளிக்கிழமை தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு பிரதேசசெயலர் தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளூர் தொழில் வழங்கு நிறுவனங்கள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தொழில் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் மற்றும் தொழில் வழிகாட்டல் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
![]() |
![]() |
![]() |
தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது மாவட்ட பணிப்பாளரின் பங்குபற்றுதலுடன் 26.06.2024 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் உதவிப்பிரதேசசெயலாளர், கணக்காளர், மாவட்ட தலைமையக முகாமையாளர், தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப்பணிப்பாளர், கருத்திட்டமுகாமையாளர், வங்கிமுகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

![]() |
![]() |






















