Corona Virus ( Covid-19) தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்படும் தகவல்களுக்கு...
Corona Virus ( Covid-19) தொடர்பாக இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் வெளியிடப்படும் தகவல்களுக்கு....
![]() |
14.05.2020 அன்று கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி உதவியுடன் தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவில் உதவி அவசியமான 6 கலைஞர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரூபா 10000 வழங்கப்பட்டன. |
| தென்மராட்சி பிரதேச செயலகத்தினால் அரச, அரச சார்பற்ற மற்றும் பொது அமைப்புக்களின் அனுசரனையுடன் COVID-19 இனால் தமது அன்றாட பணிகளை இழந்து பாதிக்கப்பட்ட பொது மக்களிற்கான நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. | |
![]() |
![]() |
![]() |
![]() |
|
கொரோனா வைரஸ் தொற்று – COVID-19 விழிப்புணர்வு தொடர்பான முக்கிய அறிவித்தல் |
|||
| நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை ( கொரோனா வைரஸ் தொற்று – COVID-19 ) காரணமாக தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு சேவையைப் பெற வருவோரும், சேவையை வழங்க வருவோரும் பின்வரும் அறிவுறுத்தல்களைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்குமாறு பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்களினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. | |||
| 1. | இருமல், தும்மல், காய்ச்சல், தொண்டைவலி மற்றும் சுவாசப் பிரச்சனை உடையவர்கள்அலுவலகத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்கவும். | ||
| 2. | அத்தியாவசியத் தேவை இருப்பின் மட்டும் அலுவலகத்திற்கு வருகை தரவும். | ||
| 3. | பொது மக்களாகிய நீங்கள் ஒரு அத்தியாவசியத் தேவையை நிறைவு செய்து கொள்வதற்குஒருவர் மட்டும் வருகை தரவும். | ||
| 4. | முகக்கவசம் (Mask) அணிந்து வருகை தரவும். | ||
| 5. | அலுவலக வாயிலிலுள்ள நீர்க்குழாயில் உங்கள் கைகளை நன்றாக சவர்க்காரமிட்டுகழுவிய பின் உள் நுழையவும். | ||
| 6. | கூட்டமாகக் கூடியிருப்பதைத் தவிர்த்து இருவருக்கிடையில் குறைந்தது 1m தூரஇடைவெளியைப் பேணிக் கொள்ளவும். | ||
| 7. | இருமும் போதும், தும்மும் போதும் உங்கள் வாயினையும் மூக்கினையும்கைக்குட்டையினால் / ரிசுக்கடதாசி ஒன்றினால் /முழங்கையினால் மூடிக்கொள்ளவும். | ||























