சாவகச்சேரி வைத்திய அதிகாரி பணிமனையினால் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றா நோய்களுக்கான பரிசோதனை 27.01.2021 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் சாவகச்சேரி நகர் பொது சுகாதார பரிசோதகர் பி.தளிர்ராஜ் மற்றும் சாவகச்சேரி வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன .
![]() |
![]() |
சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டமானது 12.01.2021 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமாகிய கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், தென்மராட்சி பிரதேச செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சி .சிறிதரன் மற்றும் கௌரவ செ .கஜேந்திரன் , சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர், மற்றும் நகரசபை உப தவிசாளர் ,உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், முப்படையினர் , திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டோர் என பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.
![]() |
![]() |
"நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" என்னும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கு இணங்க 2021 ஆம் ஆண்டிற்கான கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று காலை 8.45 மணிக்கு இடம்பெற்றது.கோவிட் 19 காரணமாக மேற்படி கடமை செயற்பாடுகள் பகுதி பகுதியாக ஆரம்பிக்கப்பட்டன .மதிப்புக்குரிய பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.இவ் நிகழ்வினை தொடர்ந்து உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.பிரதேச செயலாளர் திருமதி சு. உஷா அவர்களின் வாழ்த்து செய்தியினை தொடர்ந்து உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் , நிர்வாக உத்தியோகத்தர்,நிர்வாக கிராம அலுவலகர், முகாமையாளர் -சமுர்த்தி தலைமை பீடம் ஆகியோர் வாழ்த்து செய்தியினை வழங்கினர். பொதுசுகாதாரப் பரிசோதகரினால் கோவிட் 19 தொடர்பான விழிப்புணர்வு செய்தி வழங்கப்பட்டது. பிரதேச செயலாளர் அவர்கள் கடந்த ஆண்டு பல சவால்களை எதிர் கொண்ட போதும் தென்மராட்சி பிரதேச மக்களிற்காக சேவையாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களும் தனது நன்றிகளை தெரிவித்ததுடன் இனிவரும் காலங்களில் பொது மக்களிற்கான சேவையை நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் ஆற்ற வேண்டும் என்பதனை தெரிவித்தார்.
![]() |
![]() |
![]() |
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதிப் பங்களிப்பில் வருடாந்தம் செயற்படுத்தப்படும் "கலைஞர் சுவதம்-2020" வேலைத்திட்டம் தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலம் கலைச்சேவைக்கு பங்காற்றிய தெரிவு செய்யப்பட்ட 60வயதுக்கு மேற்பட்ட கலைஞர்கள் பத்துப்பேரை அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று சுகநலன் விசாரித்ததுடன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 3000ரூபா பெறுமதியான பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
![]() |
![]() |
யாழ் போதனா வைத்தியசாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் குருதி வழங்கும் நிகழ்வானது 12/11/2020 வியாழக்கிழமை இன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்றது.
![]() |
![]() |


























