சமுர்த்தி திணைக்களத்தின் மூன்று தசாப்த கால நிறைவினை முன்னிட்டு 01.சர்வதேச சுற்றாடல் தினம் 02.போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் நான்கு சமுர்த்தி வங்கிகளிற்கு உட்பட்ட பிரதேசங்களில் மரநடுகை நிகழ்வு மற்றும் சிரமதான நிகழ்வு மற்றும் மக்கள் மத்தியில் போதை பாவனை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர், தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், போதை தடுப்பு பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர், சுகாதார பரிசோதகர், கிராமமட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், CBO தலைவர்கள், பொதுமக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

சனாதிபதி நிதியத்தின் நடவடிக்கைகளை பிரதேச மட்டம் வரை பன்முகப்படுத்தல் திட்டத்தின் மூலம் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் முதன் முறையாக இருதய சத்திர சிகிச்சைக்கான மருத்துவ உதவி கொடுப்பனவாக இரண்டுபேருக்கு தலா 250,000.00 ரூபா வீதம் காசோலையினை 20.06.2025 அன்று வழங்கி வழங்கப்பட்டது.இந் நிகழ்வில் தென்மராட்சி பிரதேச செயலாளர் திருமதி.சு.உஷா அவர்களும் கணக்காளர் திரு.இ.றமணன் அவர்களும் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் சமூகசேவை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

509356530 1914449739409315 2871670111473457893 n

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குடும்ப வலுவூட்டல் வேலைத்திட்டம் 3 ம் கட்டம் - குடும்ப உள வலுப்படுத்தல் தொடர்பான பயிற்சி செயலமர்வு பிரதேச செயலக கணக்காளர் தலைமையில் 27.05.2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கணக்காளர், வளவாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். 60 கிராம பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்களிற்கு விளக்கமளிக்கும் இந் நிகழ்வில் வளவாளர்களாக மாவட்ட செயலக உளவளத்துணை பிரிவு உத்தியோகத்தர்களான திரு.N.உதயகுமார், திரு.க.தர்மசேகரம் அவர்கள் சிறந்த முறையில் விளக்கமளித்தார்கள்.

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குடும்ப வலுவூட்டல் வேலைத்திட்டம் 2 ம் கட்டம் - குடும்ப அபிவிருத்தித்திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி செயலமர்வு தலைமையக முகாமையாளர் தலைமையில் 22.05.2025 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வளவாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். 60 கிராம பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்களிற்கு விளக்கமளிக்கும் இந் நிகழ்வில் வளவாளராக நல்லூர் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திரு.தி.சந்திரகாசன் அவர்கள் சிறந்த முறையில் விளக்கமளித்தார்.

" நண்பா போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம் வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம்"
எனும் தொனிப்பொருளில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் வருடம் தோறும் நடாத்திவரும் புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு மற்றும் கொடிதின சேமிப்பு ஊர்வல நிகழ்வானது 13.06.2025 காலை 9.00 மணிக்கு கைதடி வங்கிக்கு உட்பட்ட நகர் பிரதேசங்களில் நடைபெற்றது இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர், CBO அங்கத்தவர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 506476895 1908773923310230 2161209931806035042 n  506456490 1908773996643556 6625320044898197564 n

யா/ சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி தரம் 9 மாணவர்களுக்கான தொகுதிப் பாடத் தெரிவு பற்றிய கலந்துரையாடல் 28.05.2025 பாடசாலை பிரதி அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் தென்மராட்சி பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் இணைந்து நடாத்தப்பட்டது.

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top