யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தின் மீள் அங்குரார்ப்பண நிகழ்வானது 2025.09.30 செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் மட்டுவில் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது.இந்நிகழ்வில் வர்த்தக வாணிப உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.ரஜீவன் அவர்கள், வைத்திய கலாநிதி ச. சிறிபவானந்தராஜா அவர்கள், க.இளங்குமரன் அவர்கள், மாவட்ட செயலாளர் உயர்திரு.ம.பிரதீபன் அவர்கள் , வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வர்த்தக வாணிப உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி. சாந்த ஜயரட்ண, யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் , மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சாவகச்சேரி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் மற்றும் உள்ளூர் அதிகார சபை கௌரவ உறுப்பினர்கள் , யாழ்மாவட்ட பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அழைக்கப்பட்ட உத்தியோகத்தர்கள்,பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை குத்தகைக்கு பெற்றுக்கொண்ட வர்த்தகர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள்ஆகியோர் பங்குபற்றினர்.இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி சென்றனர்.
 558141745 2000729494114672 4788065314264338784 n 556151777 2000738127447142 3275119963410474232 n 

கொடிகாமம் மத்தி, கொடிகாமம் தெற்கு மற்றும் கொடிகாமம் வடக்கு ஆகிய கிராமங்களில் ஏற்படுகின்ற வெள்ள பாதிப்புக்களை குறைத்துக் கொள்ளும் நோக்கில் முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கான கலந்துரையாடல் 2025.09.24 காலை 9 மணிக்கு பிரதேச செயலாளர் திரு F. C சத்திய சோதி தலைமையில் நடைபெற்றது. இதன் போது கொடிகாமம் நாவலடி தொடக்கம் எருவன் வயல் வெளி வரையான வெள்ள நீர் வெளியேறும் வாய்க்கால் பிரதேச மக்கள் பங்கேற்புடன் சிரமதான முறையில் துப்பரவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இப் பணியை நிறைவு செய்ய "உலக தரிசனம்" நிறுவனமானது நிதி பங்களிப்பு செய்யவுள்ளது. இந்த கலந்துரையாடலில் சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், வட்டார உறுப்பினர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

WhatsApp Image 2025 09 24 at 9.26.31 PM WhatsApp Image 2025 09 25 at 9.42.05 AM

தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 19.09.2025. வெள்ளிக்கிழமை பி.ப 1.30 மணிக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கௌரவ நகரசபை தவிசாளர்,கௌரவ பிரதேச சபை தவிசாளர் மற்றும் நகர ,பிரதேச சபைகளின் அழைக்கப்பட்ட கௌரவ உறுப்பினர்கள் , திணைக்களத் தலைவர்கள்,பிரதிநிதிகள், சாவகச்சேரி பொலீஸ் நிலைய உத்தியோகத்தர், இராணுவ அதிகாரிகள், சமூகமட்ட அமைப்புக்களது பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் திரு.F.C.சத்தியசோதி அவர்கள் வரவேற்புரையாற்றுகையில் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு செயலாளரின் HA/DEVP/14/DCC/VOll viii இலக்க 2025.09.01 திகதிய உள்நாட்டலுவல்கள் பிரிவு சுற்று நிருபம் 03/2025இற்கமைய இக்கூட்டம் நடைபெறுவதாகவும் இச்சுற்றறிக்கையின் முக்கிய விடயங்களை குறிப்பிட்டும் உரையாற்றினார். தொடர்ச்சியாக தலைமை உரையாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அவர்கள் அனைவரும் இணைந்து தென் மராட்சி பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அனைத்து அபிவிருத்தி பணிகள், நலன்புரி மற்றும் சமூகப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களும் ஒன்றிணைந்த ஒரு வேலை திட்டத்தின் கீழ் அனைத்து பங்குதாரர்களுடனும் ஒன்றிணைந்த வகையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பிரஜைகள் மைய அபிவிருத்திக் கட்டமைப்பான "பிரஜாசக்தி" நிகழ்ச்சித் திட்டத்தின் கட்டமைப்பு,அதன் தொழிற்பாடுகள் தொடர்பாகவும் கிராமிய தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சனைகளை இக்கட்டமைப்பின் ஊடாக அணுகி தீர்வு காணும் வழிவகைகள் தொடர்பாகவும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.பின்னர் நிகழ்ச்சி நிரலின்படி, கூட்டத்திற்கு சமூகமளிக்க முடியாமை தொடர்பாக கிடைக்கப்பெற்ற கடிதத்தை பிரதேச செயலாளர் சபையில் வாசித்தார்.
இக்கூட்டத்தில் 27. 3.2025 அன்று இடம் பெற்ற கடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் முன்னேற்ற நிலைமைகள் விரிவாக ஆராயப்பட்டதோடு பிரதேசத்தில் தற்போது பல்வேறு அரச திணைக்களங்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலை திட்டங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துதல், எழுதுமட்டுவாழ் மயான விடுவிப்பு, வீதிப்புனரமைப்பு பணிகள், வெள்ள அனர்த்த தணிப்பு நடவடிக்கைகள், கால்நடை வைத்திய சேவைகள், கால்நடைக் கட்டுப்பாடு, பயிர் அழிவு தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து, பொதுமக்களிற்கான காணி வழங்கற் செயற்பாடுகள், வைத்தியசாலை தேவைப்பாடுகள், பாடசாலை தொடங்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் கனரக வாகனங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் சமூகமட்ட அமைப்புகளின் கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.
 550652050 1993179918202963 158148258121516992 n 551377855 1993179904869631 5047500114806416771 n 
 549995664 1993179901536298 582854832405107453 n  549995664 1993179901536298 582854832405107453 n

முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் "ஆரோக்கியா" நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 23.09.2025 அன்று மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் அவர்களினால் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் "ஆரோக்கியா" நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலகப் பிரிவை சேர்ந்த மூன்று முதியோர்களுக்கு தலா 25,000/= பெறுமதியான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

WhatsApp Image 2025 09 24 at 11.29.05 AM 1WhatsApp_Image_2025-09-24_at_11.29.05_AM_2.jpg

WhatsApp_Image_2025-09-24_at_11.29.05_AM.jpg

மூன்றாவது கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் 17.09.2025 அன்று காலை 9.00 மணிக்கு பிரதேச செயலாளர்
திரு.F.C சத்தியசோதி அவர்கள் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் திரு.செ.ரமேஸ்குமார் மற்றும் பிரதேச செயலக கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், முகாமையாளர் சமுர்த்தி தலைமைப்பீடம், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் பிரதேச செயலகத்தின் நிதி, நிர்வாக செயற்பாடுகள் நிதி பிரமாணங்கள், தாபன விதிக் கோவைகளுக்கமைவாக உள்ளக கட்டுப்பாட்டினை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொதுக்கணக்காய்வு ஐயவினாக்களைக் குறைத்து கொள்ள முடியும் என்பதோடு பொது மக்களிற்கு சிறந்த சேவையினை வழங்குகின்ற நிறுவனமாக செயற்பட முடியும் என பிரதேச செயலாளர் அவர்கள் குறிப்பிட்டார். மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் கருத்து தெரிவிக்கையில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் நிதி அறிக்கைகள் உடனுக்குடன் கிடைக்கப்பெறுவதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.மேலும் பிரதேச செயலக நிதி ஒதுக்கீடுகள் மற்றும் செலவீனங்கள் தொடர்பான முன்வைப்பானது கணக்காளர் அவர்களால் முன்வைக்கப்பட்டது.
 
 548900171 1988762165311405 1652239338210224681 n 548184721 1988762161978072 3764626993416669822 n 

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top