கணனி பயிற்சி வகுப்பு 18.03.2025 மற்றும் 20.03.2025ம் திகதிகளில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சி.ஜெயசிறி அவர்கள் தலைமையில் இடம்பெற்ற பயிற்சி நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கி.தர்சன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு கணனி மென்பொருள், வன்பொருள் தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தார்.இதன் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 485026090 1839345913586365 7478521144636711302 n484978627 1839345903586366 158399467991838727 n  

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்தின வாரத்தின் ஒரு நிகழ்வாக கோயிற்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் 07/03/2025 வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வை திட்டமிடல் பணிப்பாளர் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதில் குறிப்பிட்ட கிராம மட்ட உத்தியோகத்தர்கள் , சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

"அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்" திட்டத்தை செயற்படுத்துவதற்கான தேசிய ரீதியிலான கடற்கரையை சுத்தப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் "க்ளீன் ஸ்ரீலங்கா" நிகழ்ச்சி த்திட்டத்தின் கீழ் கடற்கரையினை சுத்தப்படுத்தல் நிகழ்வானது 23.02.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணி முதல் நண்பகல் 11.30 மணி எமது பிரதேச செயலக ரீதியாக கைதடி நாவற்குழி (J/297) கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது.அந்த வகையில் இவ் நிகழ்வாது கடற்கரைப்பகுதியின் 1 கி.மீ பகுதியை சுத்தம் செய்யும் நிகழ்வு எமது பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பாதுகாப்பு படையினர்,பொலிஸ் உத்தியோகத்தர்கள்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கடற்கரையினை துப்பரவு செய்தார்கள். 
 480929324 1821830965337860 4590227264193165167 n  
480691209 1821830962004527 364164322049886638 n

தொழில்பயிற்சி அதிகாரசபையுடன் இணைந்து தென்மராட்சி விதாதா வளநிலையத்தால் நடாத்தப்பட்ட பயிற்சிநெறியை பூரணமாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் 05.02.2025 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

481507916 1827660724754884 7413191396153074020 n

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து யா/யாழ்ப்பா ம் மத்திய கல்லூரி யில் 2025.02.14ம் திகதி அன்று நடாத்தி ய "அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப்போட்டி - 2025 இல் எமது பிரதேச செயலகம் சார்பில் பங்கு பற்றிய நவீல்ட் பாடசாலை மாணவர்கள் 8 முதலாம் இடங்களையும், 10 இரண்டாம் இடங்களையும் மற்றும் 7 மூன்றாம் இடங்களையும் பெற்றுக்கொண்டார்கள். ஒட்டு மொத்தமாக எமது பிரதேச செயலகம் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

481084282 1816989749155315 4492164312225512647 n

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top