பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டம் 06.08.2025 ந் திகதி பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் உதவிப் பணிப்பாளர், மாவட்ட காணிப்பயன்பாடு பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், வட்டார வன அலுவலர் வன பரிபாலன திணைக்களம், அபிவிருத்தி உத்தியோகத்தர் சாவகச்சேரி பிரதேச சபை, விவசாய போதனாசிரியர்கள், விவசாய விரிவாக்க நிலையம் சாவகச்சேரி மற்றும் கைதடி, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கமநல சேவை நிலையம் சாவகச்சேரி மற்றும் கைதடி,  தொழில் நுட்ப உதவியாளர் கமநல சேவை நிலையம் கைதடி, Consultant Roadrid funcity Resort, தனங்கிளப்பு விவசாய சம்மேளனத் தலைவர் மற்றும் மீனவ சங்கத் தலைவர் , கிராம அலுவலர்கள் நாவற்குழி மேற்கு, தனங்கிளப்பு, கெற்பேலி, மிருசுவில் வடக்கு, கொடிகாமம் தெற்கு, கைதடி தெற்கு மற்றும் காணிக்கிளை உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

4537105d dc34 402f 8b91 c7ee7fe22f6d

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான "ஒரிகாமி "பயிற்சி பிரதேச செயலாளர் தலைமையில் 30.07.2025 அன்று பி.ப 1.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது மாணவர்களின் நுண்ணியக்கத்திறனை விருத்தி செய்யும் நோக்கில் CCH நிறுவனத்தின் அனுசரனையுடன் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வளவாளராக CCH நிறுவன உத்தியோகத்தர் கலந்துகொண்டார் இந் நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள் 60 பேர், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டார்.

 515106057 1946127972908158 2348102178346926931 n  525399839 1946127969574825 7893929625578499138 n

சமுர்த்தி திணைக்களத்தின் மூன்று தசாப்த கால நிறைவினை முன்னிட்டு தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் நுணாவில் மத்தி கபிரிவில் 17.07.2025 காலை 10.00 மணிக்கு அ.பார்த்தீபன் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், CBO தலைவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

518360088 1937601530427469 5043046846823435050 n

2025.07.29 அன்றைய தினம் J/294 நாவற்குழி கிராம சேவையாளர் பிரிவில் 16வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட ஆண் பெண் இருபாலர்களுக்கும் சாவகச்சேரி சுகாதார வைத்திய குடும்ப நல மேற்பார்வை உத்தியோகத்தரினால் வாழ்க்கைத்தேர்ச்சி பற்றிய விழிப்புணர்வு தொடர்பான பயிற்சி நடைபெற்றது.

தென்மராட்சி பிரதேச மட்ட விளையாட்டு விழா 2025.08.11 ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.பிரதம விருந்தினராக வடமாகான விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் திரு பா.முகுந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட செயலகத்தின் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு க.விஜிதரன் அவர்களும் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் அதிபர் திரு பொ.நடேசலிங்கம் அவர்களும்கௌரவ விருந்தினராக மாகாண நீளம் பாய்தல் சாதனையாளர் திரு நா. நிதுயன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
 518342121 1932934090894213 6673483967795163267 n  518357197 1932935087560780 6257895824359650506 n 1 min

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top