பண்பாட்டலுவல்கள் திணைக்களம், தென்மராட்சி பிரதேச செயலக கலாசார பேரவை மற்றும் சாவகச்சேரி கலாசார மன்றம் என்பன இணைந்து நடாத்தும் பண்பாட்டு விழா 19.12.2022 அன்று பி.ப 1.30 மணிக்கு கலாசார மண்டபம் சாவகச்சேரியில் நடைபெற உள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
|
![]() |
இளைஞர் யுவதிகளுக்கான '' தொழில் சவாலை வெற்றி கொள்ளல்'' நிகழ்ச்சி 10.12.2022 (சனிக்கிழமை) JSAC நிறுவன அனுசரணை யுடன் எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
வளவாளர்களாக திரு. க. கருணாகரன் (மாவட்ட இணைப்பாளர், மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம் ) திருமதி. மோ. நிலாந்தி (மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்), திரு. சீ. சிவதாசன் (மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
பாதுகாப்பான புலம்பெயர்தல் மற்றும் போசாக்கு, பாரம்பரிய உணவு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு கரம்பைக்குறிச்சி பொது நோக்கு மண்டபத்தில் 14.12.2022 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளர்களாக ஆயுர்வேத வைத்தியர் திருமதி. ரஜிதா கனகசுந்தரம் அவர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு செ. சுதர்சன் அவர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினார்கள்.
|
|
![]() |
![]() |
சர்வோதயம் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் எமது உதவி பிரதேச செயலாளர் தலைமையில் நாவற்குழி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் புதிய குடியேற்றம் ஐயனார் கோவிலடி, 300 வீட்டுத்திட்டம் ஆகிய பிரிவுகளில் போதைப்பொருட் பாவனை, சமூக சீர்கேட்டுச் செயற்பாடுகள், சிறுவர் பிரச்சினைகள், சுகாதாரக் குறைபாடுகள் போன்ற சமூக பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு எமது பிரதேச செயலக அலுவலர்கள், மதுவரி திணைக்கள அலுவலர்கள்,பிரதேச சபை அலுவலர்கள், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அலுவலர்கள், வலயக்கல்வி பணிமனை அலுவலர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபை அலுவலர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு அக் கிராமத்தில் உள்ள சமூகப் பிரச்சினை தொடர்பாக ஒவ்வொரு வீடுகளுக்கும் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.
![]() |
![]() |
![]() |
![]() |





























