தென்மராட்சி பிரதேசசெயலகத்தை சேர்ந்த வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு சரியான முறையில் போதைப்பொருள் தடுப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான ஒருநாள் வழிகாட்டல் செயலமர்வு World vision நிறுவன அனுசரணையுடன் சாவகச்சேரி காலாசார மண்டபத்தில் 31/08/2023 இடம்பெற்றது.
![]() |
![]() |
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தென்மராட்சி பிரதேச செயலக பாரம்பரிய விளையாட்டு விழா யா / கச்சாய் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் 29.08.2023 செவ்வாய்க்கிழமை பி. ப 2.30 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.இன் நிகழ்வில் கச்சாய்,பாலாவி ஆகிய கிராம சிறுவர்கள்,இளைஞ யுவதிகள் பங்கு பற்றி பரிசில்களைப் பெற்றுக்கொண்டனர்.நிகழ்விற்கு உதவி பிரதேச செயலாளர், யா /கச்சாய் மகா வித்தியாலய அதிபர், பிரதேச செயலக உத்தியோகாத்தர்கள், கிராமமட்ட உத்தியோகாத்தர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகளும் கலந்துகொண்டனர்.
|
|
![]() |
![]() |
IOM நிறுவனத்தின் அனுசரணையுடன் 09.08.2023 ஆம் திகதி புதன்கிழமை அன்று பொதுமக்களுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவை தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
![]() |
![]() |
வருடம் தோறும் எமது பிரதேச செயலகத்தினால் ஒழுங்கமைத்து நடாத்தப்படும் இரத்த தான முகாமானது திங்கட்கிழமை (21.08.2023) காலை 9 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இவ் நிகழ்விற்கு ஓத்துழைப்பு வழங்கிய உத்தியோகத்தர்கள் ,இரத்த வாங்கி ,போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம் மற்றும் எமது உத்தியோகத்தர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
|
|
![]() |
![]() |
![]() |
தென்மராட்சி பிரதேச செயலகத்தில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அர்ப்பணிப்பான சேவையை வழங்கி இடமாற்றலாகி செல்லும் 21 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்(அபிவிருத்தி) அனைவரையும் வாழ்த்துவதோடு செல்லும் இடத்திலும் சீரும் சிறப்புமாக சேவையாற்றவும் தமது குடும்பத்தினருடன் நலமாக வாழவும் இறைவனை வேண்டுகின்றோம்.
பிரதேசசெயலாளர் ,
உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் .

























