சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் 26.08.2024 அன்று விற்பனை சந்தை நடைபெற்றது. இந் நிகழ்வில் 20 முயற்சியாளர்கள் பங்கு பற்றினார்கள்.

 457297199 1687399582114333 3409859977904511858 n  457374813 1687399568781001 2194000829697293667 n

தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி திணைக்களத்தின் நிதி அனுசரணையில் தென்மராட்சி கிழக்கில் உள்ள பத்து கிராமிய பாடசாலை மாணவர்களை ஒருங்கிணைத்து யா/உசன் இராமநாதன் பாடசாலையில் 22.08.2024 வியாழக்கிழமை தரம் 05 மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.இக் கருத்தரங்கில் உதவி பிரதேச செயலாளர், ஆசிரிய ஆலோசகர், பாடசாலை அதிபர், ஏனைய பாடசாலை ஆசிரியர்கள்,சமுர்த்தி முகாமையாளர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள்,CBO அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 100 மாணவர்கள் கலந்து பயன்பெற்ற இக் கருத்தரங்கில் வளவாளராக யா/உசன் இராமநாதன் பாடசாலை ஆசிரியர் திரு சி.ஜெயந்தன் அவர்கள் சிறப்பான முறையில் கடமையாற்றினார்.

456717813 1683572485830376 8232714368078951642 n   456666016 1683572409163717 8600316164455523601 n
பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான கருத்தரங்கு தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 30.07.2024 ஆம் திகதி இடம்பெற்றது.இக்கருத்தரங்கில் பாதுகாப்பான முறையில் குறிப்பாக பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லுதல் மற்றும் இடர்பாடுகளுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் பற்றி கூறப்பட்டது. இவ்விழிப்புணர்வின் வளவாளராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து தமது கருத்துக்களை வழங்கினார்.
453435171 1667907074063584 5496943591114054763 n

தேசிய தொழில் முயற்சி அதிகாரசபையின் (NEDA) நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான Fashion Jewels Making பயிற்சி நெறியானது இன்றைய தினம் 22/08/2024 சாவகச்சேரி J/300 கிராம சேவையாளர் அலுவலகத்தில் 1ம் நாள் பயிற்சி நெறியானது நடைபெற்றது. திருமதி சத்தியநிதி கவிதா வளவாளராக கலந்து கொண்டு பயிற்சி நெறியினை முன்னெடுத்தார்.

456239810 1683571512497140 6529198828225849461 n  456621714 1683571425830482 184919369547829620 n 

கல்வி அமைச்சினால் ஏற்படும் செய்யப்பட்டு நடாத்தப்பட்ட 2024ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கணணி, ஆங்கிலம் மற்றும் தொழில் வழிகாட்டல் தொடர்பான பயிற்சி நெறிகளை முடித்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யா/வரணி மத்திய கல்லூரியில் 23.07.2024 பாடசாலை அதிபர் தலைமையில் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடாத்தப்பட்டது.

452873569 1662631037924521 1189530222302010535 n

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top