![]() |
|
சாவகச்சேரி இந்து கல்லூரியில் சாதாரண தரப் பரீட்சையை நிறைவு செய்து உயர்தரம் செல்ல இருக்கும் மாணவர்களுக்கான உயர் தர பாடநெறியை தெரிவு செய்வதற்காக , "தொழிலிற்கான திறவுகோல்"- (Career Key )என்னும் பரீட்சை ஊடாக தமது தொழில் துறையை தேர்வு செய்யும் நிகழ்வானது எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் யாழ் மாவட்ட மனித வலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் 08.04.2021 அன்று சாவகச்சேரி இந்து கல்லூரியில் நடைபெற்றது .இவ் நிகழ்வில் சுமார் 180 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
![]() |

இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக 100,000 அரச காணித்துண்டுகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சை ஆனது எமது பிரதேச செயலகத்தில் 24 ,25.02.2021 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. மேற்குறித்த நேர்முக தேர்வில் 269 விண்ணப்பதாரிகள் பங்குபற்றினர்.
![]() |
![]() |
![]() |
|
![]() |
நமது நாட்டின் 73வது தேசிய சுதந்திரதினவிழா "பாதுகாப்பான தேசம் -செழிப்பான நாடு" எனும் தொனிப்பொருளுடன் நேற்று கொண்டாடப்பட்டது. காலை 8.00 மணியளவில் தேசிய கோடி ஏற்றலுடன் இவ் நிகழ்வு ஆரம்பமாகியது.இவ் நிகழ்வினை முன்னிட்டு பிரதேச செயலக வளாகத்திலும் கிராம அலுவலர் பிரிவுகளிலும் காலை 9.29 ற்கு சுப முகூர்த்த வேளையில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. அதனைதொடர்ந்து சிரமதான பணிகள் நடைபெற்றது.
|
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |



























