அரச மொழிகள் திணைக்களத்தால் அரச உத்தியோகத்தர்களுக்காக நடைபெற்ற 150 மணித்தியாலங்களைக் கொண்ட இரண்டாம் மொழி சிங்களப் பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு 23.04.2021 அன்று வெள்ளிக்கிழமை மாலை 2.00 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி சு. உஷா தலைமையில் வரணி கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பயிற்சியை நிறைவுசெய்த உத்தியோகத்தர்களிற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் திரு.மகேசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.மேலும் இந் நிகழ்வில் அரச கரும மொழித்திணைக்களப் பணிப்பாளா் பிறின்ஸ் சேனாதீர, மேலதிக அரசாங்க அதிபர், அரச கரும மொழித்திணைக்கள இணைப்பாளர்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சிநெறியை நிறைவு செய்த உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
சிங்கள பயிற்சிநெறி வளவாளர்கள் பிரதேச செயலாளர் மற்றும் அரச கரும மொழித்திணைக்களப் பணிப்பாளா் பிறின்ஸ் சேனாதீர அவர்களாலும் கௌரவிக்கப்பட்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
கடந்த ஆண்டு(2020) மார்கழி மாதம் 22ஆம் திகதி மாங்குளம் பகுதியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த கொடிகாமம் மத்தியை சேர்ந்த விஜயந்தன் அவர்களின் குடும்பத்திற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்பட்ட இழப்பீட்டு கொடுப்பனவாக ரூபா 500 000 பெறுமதியான காசோலை உதவி பிரதேச செயலாளரினால் வழங்கிவைக்கப்பட்டது.
![]() |






















