
எமது பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக(தாபன கிளை) கடமையாற்றி இன்றுடன் ஒய்வு பெற்று செல்லும் திருமதி சூரியகுமாரி யோகநாதன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வும் சேவை நலன் பாராட்டும் இன்று எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. திருமதி சூரியகுமாரி யோகநாதன் அவர்கள் செயலக நடவடிக்கைகளில் முன்னின்று சிறப்பான சேவையினை வழங்கியிருந்தார்கள். இவ் வகையில் அவர்கள் எமது பிரதேசத்திற்கு ஆற்றிய சேவைக்காக உத்தியோகத்தர்கள் சார்பில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். திருமதி சூரியகுமாரி யோகநாதன் அவர்கள் வாழ்வில் அனைத்து நலங்களும் பெற்று வாழ இறைவனை பிராத்திக்கின்றோம் .
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|
சுரகிமு கங்கா தேசிய சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டம் பிரதேச செயலர் தலைமையில் 15.11.2021 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

எமது பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றும் திரு சுதாகரன் அவர்கள் தேசிய கலை இலக்கியப் போட்டி 2021 ல் தென்மராட்சி பிரதேச மட்டத்தில் திறந்த பிரிவில் பாடலாக்கம், கவிதை, சிறுவர் கதை ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலாமிடம் பெற்றமைக்கான பரிசினை தென்மராட்சி உதவிப் பிரதேச செயலர் திருமதி தமிழினி சதீஸ் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.திரு சுதாகரன் அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் .

எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவப்போட்டி -2020 இல் 1ம் இடத்தை திருமதி வ.அகல்யா அவர்களும் 2ம் இடத்தினை திரு க.தனீஸ்வரன் மற்றும் பா .சுபாசன் அவர்களும் 3ம் இடத்தினை திரு.ப.நிரஞ்சன் அவர்களும் பெற்று கொண்டனர். எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவப்போட்டி -2020 இல் 1ம் இடத்தை திருமதி வ.அகல்யா அவர்களும் 2ம் இடத்தினை திரு க.தனீஸ்வரன் மற்றும் பா .சுபாசன் அவர்களும் 3ம் இடத்தினை திரு.ப.நிரஞ்சன் அவர்களும் பெற்று கொண்டனர்.
கிராம உத்தியோத்தர்களுக்கு எமது மனம் நிறைத்த பாராட்டுகளை தெரிவிப்பதோடு , மாவட்ட மற்றும் தேசிய ரீதியில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.





















