IOM சர்வதேச அமைப்பின் அனுசரணையுடன் மட்டுவில் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பொதுமக்களிற்கு பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான விழிப்புணர்வு 13.06.2024 ஆம் திகதி கண்ணகை சனசமூக நிலையத்தில் கிராம மட்ட உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவினரால் நடாத்தப்பட்டது.இவ்விழிப்புணர்வின் வளவாளர்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர், IOM அமைப்பின் உத்தியோகத்தர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினார்கள்.மேலும் இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டோர், வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போர் மற்றும் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |

















