2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வும், பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் ”விற்பனையும் கண்காட்சியும்” நிகழ்வும் எமது பிரதேச செயலகத்தில் 16.03.2022 அன்று பிரதேச செயலாளர் திருமதி.உஷா சுபலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை உள நல வைத்திய அதிகாரி திருமதி. வினோதா அச்சுதன் அவர்களும் , சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்டத்தரணி திருமதி. த. பிரியங்கா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் தேவை நாடும் மகளிர் அமைப்பின் இணைப்பாளர், உலக தரிசன நிறுவனத்தின் முகாமையாளர்,பிரதிநிதிகள், கிராமிய மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.