அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கான இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான மேலதிக சலுகைக் காலத்தை வழங்கல்.இதுவரை முதலாம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் விண்ணப்பங்களைச் சமர்பிக்கத் தவறியவர்கள் இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்காக அரசு முடிவு செய்துள்ளது.இதன்படி 25.11.2024 ஆம் திகதி முதல் 02.12.2024 ஆம் திகதி வரையான காலத்தினுள் இதுவரை விண்ணப்பங்களைச் சமர்பிக்காதவர்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்தலுக்கான
சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இதற்காக இரண்டாம் கட்டத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட படிவத்தை பயன்படுத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து குறிப்பிட்ட காலப்பகுதிக்கு முன்னர் கிராம மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் கையளிக்கவும். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தேசிய அடையாள அட்டை அவசியமாகும்.















