தவசிக்குளம் போக்கட்டி அம்மன் கோவில் மண்டபத்தில் தென்மராட்சி பிரதேச சிறுவர் சபை தலைவர் நாகேஸ்வரன் லக்சனன் தலைமையில் 01.10.2024 அன்று பி.ப 3.30 மணியளவில் ஆரம்பமாகி இடம் பெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக உதவி பிரதேச செயலாளர் திருமதி தமிழினி சதீஸ் அவரகளும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் யாழ் போதனா வைத்திய சாலையின் வைத்திய கலாநிதி ஆ.சஜாத் அவர்கள் வளவாளராக பங்குபற்றி விழிப்புணர்வு கருத்துரை வழங்கியதுடன் சிறுவர் கழக சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.நிகழ்வில் பங்குபற்றிய சிறுவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.இந் நிகழ்விற்கு நிதி அனுசரணை World Vision நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.
![]() |
![]() |
![]() |
![]() |



















