"வலுவான எதிர்காலத்திற்கான தொடக்கவுரை" என்ற தொனிப்பொருளின் கீழ் 2024 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது எமது பிரதேச செயலகத்தில் 2024.01.01 திங்கட்கிழமை இன்று மு.ப 9.00 மணியளவில் ஆரம்பமானது.
நிகழ்வின் ஆரம்பத்தில் தேசிய கொடி ஏற்றல் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது . ஒரு நிமிட அக வணக்கத்தை தொடர்ந்து உத்தியோகத்தர்களுக்கான அரச சேவை சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.















