தென்மராட்சி பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (15.04.2026) காலை 9.45 மணிக்கு தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தென்மராட்சி பிரதேச செயலர் F.C. சத்தியசோதி அவர்களுக்கு பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் கைவிசேடத்தினை வழங்கி ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து பிரதேச செயலாளரினால் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் கைவிஷேடம் வழங்கி வைக்கப்பட்டது.
![]() |
![]() |
|

















