அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வும் மொழித்திட்ட குழுவை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டமானது 2025.12.29 ஆம் திகதி திங்கட்கிழமை பி. ப 2.00மணிக்கு தென்மராட்சி பிரதேச செயலாளர் திரு. F. C சத்தியசோதி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் வளவாளராக பிரதேச செயலாளர் கலந்துகொண்டதுடன், பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், பிரதிதிட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |

















