தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற "தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம்" 2025-2027ம் ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்ட Clean Sri lanka வேலைத் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற சமுதாய உற்பத்தித்திறன் மாதிரிக் கிராம திட்டத்தில் எமது பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்குமான அடிப்படை விழிப்புணர்வு மற்றும் கிராம அபிவிருத்தி திட்டம் தயாரித்தல் தொடர்பான நிகழ்வு 16.12.2025 ஆம் திகதி பி. ப 2.00 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் மந்துவில் கிழக்கு முன்பள்ளியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மதகுரு, பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரின் இணைப்பாளர், தினணக்களம் சார் உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புகள், 50 குடும்பங்கள் சார் அங்கத்தவர்கள் மற்றும் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
















