Friends நிறுவனத்தின் அனுசணையுடன் சிறுவர் பெண்கள் பிரிவினரால் வரணி வடக்கு மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது 12.09.2023 செவ்வாய்க்கிழமை கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறுவர் பாதுகாப்பு, நெருக்கீட்டு முகாமைத்துவம், மற்றும் பால்நிலை வன்முறை, வீட்டு வன்முறையிலிருந்து பாதுகாத்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இதில் வளவாளர்களாக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும்உளவளத்துணை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.















