நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தென்மராட்சி பிரதேச செயலக பாரம்பரிய விளையாட்டு விழா யா / கச்சாய் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் 29.08.2023 செவ்வாய்க்கிழமை பி. ப 2.30 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.இன் நிகழ்வில் கச்சாய்,பாலாவி ஆகிய கிராம சிறுவர்கள்,இளைஞ யுவதிகள் பங்கு பற்றி பரிசில்களைப் பெற்றுக்கொண்டனர்.நிகழ்விற்கு உதவி பிரதேச செயலாளர், யா /கச்சாய் மகா வித்தியாலய அதிபர், பிரதேச செயலக உத்தியோகாத்தர்கள், கிராமமட்ட உத்தியோகாத்தர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகளும் கலந்துகொண்டனர்.
|
|
![]() |
![]() |

















